Jai bhim Manikandan : ஜெய் பீம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். அதற்கு முன்பே காதலும் கடந்து போகும், காலா மாதிரியான சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படம் ஜெய் பீம்.
ஏனெனில் ஜெய் பீம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்தனைக்கும் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் கூட இல்லாத படம்தான் என்றாலும் கூட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மணிகண்டன். தற்சமயம் இவர் நடித்திருக்கும் லவ்வர் என்கிற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
அதில் அவர் கூறும் பொழுது பள்ளி பருவத்தில் அவருக்கு இருந்த காதல் குறித்து கேட்கப்பட்டது. அப்பொழுது கூறியவர் என்னுடன் ஒரு நண்பன் இருந்தான் அவன் மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்களை பார்த்துவிட்டு காதல் செய்யாமல் இருப்பது தான் பெரிய கெத்து என்று பேசி வந்தான்.
நானும் அதெல்லாம் உண்மை என்று நம்பி பள்ளி காலத்தில் துவங்கி கல்லூரி வரை காதலிக்காமலேயே இருந்து விட்டேன். அந்த கம்முனாட்டி மட்டும் என் கண்ணில் பட்டான் என்றால் அவனுக்கு இருக்கு என்று கூறிய மணிகண்டன் அந்த நண்பனின் பெயர் பிரவீன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இப்படியான ஒரு நண்பன் எல்லாருக்குமே உண்டு என்று இதற்கு நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.