Connect with us

எஸ்.கே கட்சி ஆரம்பிக்க போறாரா? நிகழ்ச்சியில் கிளம்பிய சர்ச்சை!.. சீட்டை விட்டு எழுந்த சிவகார்த்திக்கேயன்!..

News

எஸ்.கே கட்சி ஆரம்பிக்க போறாரா? நிகழ்ச்சியில் கிளம்பிய சர்ச்சை!.. சீட்டை விட்டு எழுந்த சிவகார்த்திக்கேயன்!..

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் அப்பொழுது மக்களுக்கு பிடித்த வகையில் பேசி பெரும் மக்கள் கூட்டத்தை தனக்கான ரசிகர் பட்டாளமாக வைத்திருந்தார்.

இதுவே இவர் சினிமாவிற்கு வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்க தொடங்கினார் மெரினா, 3 போன்ற திரைப்படங்களுக்கு பிறகு ஹீரோவாக அவர் நடித்த திரைப்படம் மனம் கொத்தி பறவை அதனை தொடர்ந்து அவர் நடித்த எதிர்நீச்சல் போன்ற பல படங்களில் தொடர்ந்து காமெடி கதாபாத்திரமாக நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒரு கமர்சியல் ஹீரோவாக மாற்றிக் கொண்டார். தற்சமயம் ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்பது போல காமெடியாக அவரிடம் கேட்கும் பொழுது அவர் அந்த சீட்டை விட்டு எழுந்து சென்று வேறு சீட்டில் அமர்ந்து விட்டார். மேலும் காமெடிக்கு கூட அதைப்பற்றி எல்லாம் பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டார் சிவகார்த்திகேயன். அந்த அளவிற்கு அரசியலில் இருந்து சுத்தமாக விலகி இருக்கிறார் எஸ்.கே.

To Top