Connect with us

திருமணத்திற்கு பிறகு ரேவதிக்கு நடந்த அவலம்..! திரையை விட்ட விலக இதுதான் காரணம்..!

revathy

Cinema History

திருமணத்திற்கு பிறகு ரேவதிக்கு நடந்த அவலம்..! திரையை விட்ட விலக இதுதான் காரணம்..!

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேவதி. பொதுவாகவே பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான யாருமே வரவேற்பை பெறாமல் போனதே கிடையாது.

அந்த வகையில் ரேவதியும் எக்கச்சக்க வரவேற்பு பெற்று நடித்து வந்தார் இப்போது வரை தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரேவதி.

1983 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மண்வாசனை திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் ரேவதி. இந்த திரைப்படத்தில்தான் நடிகர் பாண்டியனும் கதாநாயகனாக அறிமுகமானார் அவர்கள் இருவருமே பாரதிராஜாவின் மூலமாக அறிமுகமானவர்கள்தான்.

ஆரம்பத்தில் அறிமுகம்:

ரேவதி பள்ளி படித்துக் கொண்டிருந்த பொழுது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார். அவர் பள்ளி முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில் ன் பாரதிராஜா அவரை பார்த்துவிட்டு இவர் நமது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம்.

பிறகு ரேவதியின் வீட்டில் பேசி அவரை அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா. ஆனால் இப்பொழுது எல்லாம் அப்படி நடிக்க வைப்பதற்கு வாய்ப்பு கிடையாது ஏனெனில் பள்ளி படிக்கும் பெண்களை கதாநாயகியாக எல்லாம் இப்பொழுது நடிக்க வைப்பது கிடையாது.

அதற்குப் பிறகு தொடர்ந்து தமிழில் பெரும் நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் ரேவதி. மௌன ராகம், தேவர் மகன், புதுமைப்பெண் போன்ற படங்கள் இவரது திரைப்படங்களில் முக்கியமான படங்களாகும்.

பெரும் நடிகர்கள் படத்தில் வரவேற்பு:

அதேபோல தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் ரேவதிக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் ரேவதி நடித்த புன்னகை மன்னன் திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படி அப்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த இயக்குனர்கள் பலரும் ரேவதியை தங்களது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வைத்தனர்.

அவ்வளவு சிறுவயதிலேயே ரேவதிக்கு இருந்த நடிப்பு திறமையே அதற்கு காரணமாக இருந்தது. இப்படி ரேவதி ரொம்ப சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு திருமணமும் நடந்தது. சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரேவதி.

ஆனால் திருமணத்திற்கு பிறகு எதிர்பாராத விதமாக ரேவதியின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ரேவதிக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைய தொடங்கியது அதனால் தான் அதற்குப் பிறகு பல வருடங்கள் ரேவதி தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் என்று கூறப்படுகிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

divya duraisamy 3
dhanush meena
sasikumar
ttf vasan zoya
To Top