Connect with us

முதல் படமே 100 நாள் ஹிட்டு!.. அந்த விஷயத்தை மட்டும் பண்ணாமல் இருந்திருந்தால்… புலம்பும் முரளி பட இயக்குனர்!..

murali nagaraj

Cinema History

முதல் படமே 100 நாள் ஹிட்டு!.. அந்த விஷயத்தை மட்டும் பண்ணாமல் இருந்திருந்தால்… புலம்பும் முரளி பட இயக்குனர்!..

Social Media Bar

சினிமாவில் எல்லோருக்குமே உடனே இயக்குனர் ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது. அதற்காக மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். தற்சமயம் பெரும் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்தை இயக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் என்று தந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் பல தயாரிப்பாளர்களிடம் சென்று கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான முறை மாநகரம் திரைப்படத்தின் முழு கதையையும் கூறி இருக்கிறேன். அப்படியெல்லாம் கூறியும் கூட ஒரு தயாரிப்பாளருக்கு மட்டும் தான் அந்த கதை பிடித்திருக்கிறது என்று அதை தயாரிக்க ஒப்புக்கொண்டார் என்று கூறியிருக்கிறார்.

இப்போதைய நிலையிலேயே அவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் பொழுது  1996 களிலேயே மிகவும் எளிதாக வாய்ப்பை பெற்று இயக்குனரானவர் இயக்குனர் நாகராஜ். இயக்குனர் நாகராஜ் வெகு காலங்களாக உதவி இயக்குனராக இருந்து வந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு காதல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக வேண்டுமென்று ஆசை இருந்தது.

சரிவை கண்ட இயக்குனர்:

தனது நண்பருக்கு நிகழ்ந்த நிஜமான காதல் கதையை அடிப்படையாகக் கொண்டே ஒரு கதையை எழுதினார் நாகராஜ். அந்த கதையை லாவண்யா என்னும் தயாரிப்பாளரிடம் சென்று கூறினார். அதற்கு முன்பு கதையை வேறு எந்த தயாரிப்பாளரிடமும் அவர் கூறவில்லை. முதல் தயாரிப்பாளரே லாவண்யா தான் லாவண்யாவிற்கு அந்த கதை பிடித்து விட்டது படமாக்கலாம் என்று கூறிவிட்டார்.

அடுத்த ஒரு மாதத்தில் படபிடிப்பும் தொடங்கிவிட்டது முரளியை கதாநாயகனாக வைத்து சுவலட்சுமியை கதாநாயகியாக வைத்து தினந்தோரும் என்கிற அந்த திரைப்படத்தை இயக்கினார் நாகராஜ். முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. கிட்டத்தட்ட 100 நாட்கள் ஓடி வெற்றி கொடுத்தது தினந்தோரும் திரைப்படம்.

இந்த நிலையில் பெரும் உச்சத்தை அடைந்திருக்க வேண்டிய இயக்குனர் நாகராஜ் தனது குடி பழக்கத்தின் காரணமாக சினிமாவில் சரிவை கண்டித்தார் தெலுங்கு சினிமாவில் இருந்து பெரும் நடிகர் எல்லாம் அவரை படம் இயக்குவதற்கு அழைத்த பொழுது மது அருந்திவிட்டு அந்த திரைப்படங்களின் வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் நாகராஜ்.

இதனை ஒரு பேட்டியில் கூறிய அவர் முதல் படமே இவ்வளவு சிரமம் இல்லாமல் கிடைத்ததால் தான் இப்படி மோசமாகிவிட்டேன் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

To Top