Connect with us

என்னையா அந்த மாதிரி படத்துல நடிக்க சொல்ற!.. எஸ்.ஜே சூர்யாவை அவமானப்படுத்திய ஹீரோ!..

Cinema History

என்னையா அந்த மாதிரி படத்துல நடிக்க சொல்ற!.. எஸ்.ஜே சூர்யாவை அவமானப்படுத்திய ஹீரோ!..

Social Media Bar

தமிழில் உள்ள நடிகர்களில் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வரும் நடிகராக எஸ் ஜே சூர்யா இருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக உதவி இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்தார். அவர் இயக்கிய வாலி, குஷி ஆகிய இரு திரைப்படங்களின் பெரும் வெற்றிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அடுத்ததாக ஒரு கதை எழுதினார்.

இந்த கதை கொஞ்சம் இளையோருக்கான கதையாக இருந்தது. இருந்தாலும் இது பயங்கர வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எஸ் ஜே சூர்யாவிற்கு இருந்தது. எனவே உடனடியாக அவர் ஒரு பிரபலமான ஹீரோ நடிகரை சந்தித்து அந்த படத்தின் கதையை கூறினார்.

ஆனால் அந்த நடிகர் இந்த மாதிரியான கவர்ச்சி படங்கள் எல்லாம் என்னால் நடிக்க முடியாது, என்ன மாதிரியான கதை எல்லாம் சொல்ற நீ என்று எஸ்.ஜே சூர்யாவை திட்டிவிட்டார். அதன் பிறகு அங்கிருந்து வெளியேறிய எஸ் ஜே சூர்யா எதற்கு இவர்கள் காலையெல்லாம் பிடித்துக் கொண்டு, நாமே அந்த படத்தில் நடித்தால் என்ன என்று முடிவு செய்தார்.

அதனை தொடர்ந்து அவர் நடித்து வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் அன்பே ஆருயிரே, ஒருவேளை அந்த நடிகர் அப்பொழுது நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால் தனக்குள் இருக்கும் நடிப்புத்திறனை எஸ் ஜே சூர்யா அறியாமலே போயிருக்க வாய்ப்புகளும் உண்டு

To Top