Cinema History
மார்க்கெட் போனதுக்காக அந்த கேரக்டரில் எல்லாம் நடிக்க முடியாது!.. சிவாஜி படத்துக்கு நோ சொன்ன தியாகராஜ பாகவதர்!..
தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் பிரபலமான நடிகர்கள் என ஒருவர் இருப்பார். ஆனால் அடுத்த தலைமுறை நடிகர்கள் வந்த பிறகு முந்தைய நடிகர்களுக்கு மார்க்கெட் குறைந்துவிடும்.
என்னதான் நடிகர் திலகமாகவே இருந்தாலும் ஒரு காலத்திற்கு நடிகர் சிவாஜி கணேசனுக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. அந்த சூழ்நிலையில் தன்னால் நடிப்பை விட முடியாது என முடிவு சிவாஜி கணேசன் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
ஆனால் கமல் ரஜினி மாதிரியான நடிகர்கள் எல்லாம் இப்போதும் ஹீரோக்களாக நடித்துக்கொண்டுள்ளனர். முந்தைய தமிழ் சினிமாவில் இந்த நிலை இருக்கவில்லை. இந்நிலையில் சிவாஜிக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகர் தியாகராஜ பாகவதர்.
புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகர் என அவரை கூறலாம். அவர் நடித்த அம்பிகாபதி திரைப்படம் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதே திரைப்படத்தை மீண்டும் சிவாஜி கணேசனை வைத்து எடுக்கலாம் என முடிவு செய்தனர்.
இதில் அம்பிகாபதிக்கு தந்தையாக தியாகராஜ பாகவதரை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஏனெனில அப்போது தியாகராஜ பாகவதருக்கு வாய்ப்புகள் எதுவும் வராமல் இருந்தது.
ஆனால் தியாகராஜ பாகவதர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு காசு முக்கியமே கிடையாது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அது எனது பெருமைக்கு இழுக்காக அமையும் என அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் தியாகராஜ பாகவதர்.