Connect with us

டி.எம்.எஸ் இவ்வளவு பெரிய பாடகராக ஒரு பஜ்ஜிதான் காரணம்!.. அப்படி என்ன நடந்துச்சு!..

TM soundararajan

Cinema History

டி.எம்.எஸ் இவ்வளவு பெரிய பாடகராக ஒரு பஜ்ஜிதான் காரணம்!.. அப்படி என்ன நடந்துச்சு!..

Social Media Bar

தமிழ் சினிமாவின் ஆரம்பக்காலக்கட்டங்களில் பாடகர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு படத்தில் வரும் பாடலை யார் பாடினார் என்றே தெரியாது. ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் பாடகர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

அதில் முக்கியமான பாடகராக இருந்தவர் பாடகர் டி.எம் சௌந்தர்ராஜன். சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் டி.எம் சௌந்தர் ராஜன். டி.எம் சௌந்தர் ராஜன் சிறு வயது முதலே பாடல்கள் மீது அதிக நாட்டம் கொண்டவர். டி.எம்.எஸ் பாடும் எந்த ஒரு பாடலிலுமே சுருதி விலகாது என கவிஞர் வாலியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மாபெரும் முருக பக்தனான டி.எம். சௌந்தர் ராஜன் மனதை மயக்கும் பல முருகன் பாடல்களை பாடியுள்ளார். இப்போதும் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு சென்றால் அங்கு டி.எம்.எஸ் பாடல்கள் ஒலிப்பதை தவிர்க்க முடியாது. என்னதான் திரை துறையில் நிறைய பாடல்கள் பாடியிருந்தாலும் அவரது பக்தி பாடல்கள் அதை விட பிரபலமானவை.

அதே போலவே அவரது ஆரம்பக்கால வாழ்க்கையும் பக்தி பாடல்களில்தான் துவங்கியது. சின்ன வயதில் பாடல்கள் மீது ஆர்வம் கொண்ட டி.எம்.எஸ் அடிக்கடி ஏதாவது பாடல் பாடிக்கொண்டே இருப்பார். அப்போது அங்கிருந்த கோவிலை சேர்ந்தோர் டி.எம்.எஸ்ஸை அழைத்து அவரை கோவிலில் பக்தி பாடல் பாட சொல்லியுள்ளனர்.

அப்படி டி.எம்.எஸ் பாடியதற்காக அவருக்கு பஜ்ஜி மாதிரியான நொறுக்கு தீனிகளை வாங்கி தந்துள்ளனர். இது அவருக்கு பாட்டு பாடுவது மேல் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அதன் பிறகு இந்த வெகுமதிகளுக்காகவே அதிகமாக பாட துவங்கியுள்ளார் டி.எம்.எஸ்.

Articles

parle g
madampatty rangaraj
To Top