Connect with us

அந்த பாட்டை ரஜினிக்கு போடல இளையராஜாவுக்காக போட்டேன்!.. வாலி செய்த வேலை…

Cinema History

அந்த பாட்டை ரஜினிக்கு போடல இளையராஜாவுக்காக போட்டேன்!.. வாலி செய்த வேலை…

Social Media Bar

தமிழில் சிறப்பாக பாடல் வரிகளை எழுதிய பிரபலங்களில் கண்ணதாசனுக்கு பிறகு பிரபலமாக இருப்பவர் கவிஞர் வாலிதான். கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் துவங்கி விஜய் அஜித் காலம் வரை தமிழ் சினிமாவில் பாடல் வரிகளை தந்தவர் வாலி.

தளபதி படத்திற்கு அனைத்து பாடல்களையும் வாலிதான் எழுதினார். தளபதி திரைப்படம் மும்பையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததால் அதன் பாடல் இசையமைப்பும் மும்பையில்தான் நடை பெற்றது. ஆனால் வாலியால் அப்போது மும்பைக்கு வர முடியவில்லை.

ஏனெனில் அவர் தமிழ்நாட்டில் வேறொரு வேலையில் இருந்தார். எனவே தினமும் ஒவ்வொரு பாடலுக்கான வரிகளையும் ப்ரொடக்சன் மேனஜரிடம் எழுதி அனுப்பினார். இந்த நிலையில் சின்ன தாயாவள் என்கிற பாடல் வரிகளை வாலி எழுதினார்.

அந்த பாடல் வரிகளை கண்டதும் இளையராஜாவிற்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்த பாடல் இளையராஜாவை மனதில் வைத்து எழுதியது. இளையராஜாவின் அம்மா பெயர் சின்ன தாயி, அதை மனதில் கொண்டே சின்ன தாயாவள் தந்த ராஜாவே என்று வாலி எழுதியிருந்தார்.

To Top