News
100 பேருடன் உறவு வச்சிக்கணும்.. சீரிஸிற்காக ஒப்புக்கொண்ட நடிகை வேதிகா..!
முனி திரைப்படத்தின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வேதிகா அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு காளை திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வந்தார் நடிகை வேதிகா.
போகப்போக அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின பொதுவாகவே நடிகைகளை பொறுத்த வரை அவர்களுக்கு எவ்வளவு வேகத்திற்கு வரவேற்புகள் அதிகரிக்கிறதோ அதே அளவில் குறைந்துவிடும் என்று கூறலாம்.
வேதிகாவுக்கு கிடைத்த வரவேற்பு:
அந்த வகையில் நடிகை வேதிகாவிற்கு வெகு சீக்கிரத்திலேயே வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கிவிட்டன. ஆனாலும் தமிழ் சினிமாவில் முயற்சி செய்து வந்து கொண்டுள்ளார். இதற்கு நடுவே முனி திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் பெரிதான வாய்ப்பு என்றெல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது சாதாரணமான ஒரு கதாபாத்திரத்தில்தான் நடித்தார் வேதிகா. இந்த நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில் டிவி சீரிஸ்களுக்கும் முக்கியத்துவம் இருப்பதை அறிந்தார் வேதிகா.
அதனை தொடர்ந்து ஒரு டிவி சீரியஸில் முக்கிய கதாபாத்திரமாக களமிறங்கி இருக்கிறார் யக்ஷினி என்கிற இந்த டிவி சீரியஸை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த சீரியஸ் முழுக்க கவர்ச்சியான ஒரு தோற்றத்தில் வருகிறார் வேதிகா.
புதிய வாய்ப்பு:
ஏனெனில் யக்ஷி என்பதே ஆண்களை மனம் மயக்கி அவர்களை கொலை செய்யும் ஒரு துர் தேவதையாக பார்க்கப்படுகிறது என்னும் பொழுது அந்த கதாபாத்திரத்தில் வரும் வேதிகா எப்போதுமே கவர்ச்சியாக உடை அணிந்து வெளிப்படுகிறார்.
மேலும் இந்த சீரியஸின் கதைப்படி 100 ஆண்களுடன் உறவு கொண்டு அவர்களை கொலை செய்தால்தான் வேதிகா அவருடைய உலகத்திற்கு செல்ல முடியும் என்று கதை இருக்கிறது இந்த நிலையில் நூறாவது நபரை எப்படி கொலை செய்கிறார் என்பதுதான் கதை என கூறப்படுகிறது.

கதை கொஞ்சம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் கூட வெகு நாட்கள் கழித்து கிடைக்கும் வாய்ப்பு விட வேண்டாம் என்று இதற்கு ஒப்பு கொண்டு நடித்துள்ளார் வேதிகா தற்சமயம் இந்த தொடர் ஹாட்ஸ்டார் இல் ரிலீஸ் ஆகி உள்ளது.
