Connect with us

அந்த சீன் எல்லாம் கேவலமா இருந்துச்சு! தன் படத்தை தானே கழுவி ஊற்றிய வெற்றிமாறன்..

vetrimaaran

Cinema History

அந்த சீன் எல்லாம் கேவலமா இருந்துச்சு! தன் படத்தை தானே கழுவி ஊற்றிய வெற்றிமாறன்..

Social Media Bar

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அனைவராலும் ஒரு முற்போக்கு எண்ணம் கொண்ட இயக்குனர் என இவர் அறியப்படுகிறார். ஏனெனில் அவரது ஒவ்வொரு திரைப்படமும் சமூகம் சார்ந்த ஒரு விஷயத்தை பேசுவதே இதற்கு காரணமாகும்.

ஆனால் சினிமாவிற்கு வந்த துவக்கத்தில் வெற்றிமாறன் பல விஷயங்களில் சரியான நிலைபாடுகளில் இல்லை. இதனால் அவரது திரைப்படங்களில் பல தவறான கருத்துக்கள் இடம் பெற்றன.

முக்கியமாக பொல்லாதவன் படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் வெற்றிமாறனின் மனநிலைக்கு பொருந்தாதவை. இதுக்குறித்து வெற்றிமாறன் கூறும்போது “இப்ப பார்க்கும்போதுதான் அந்த சீன் எல்லாம் கேவலமா இருந்துச்சுன்னு தெரியுது.

அப்ப அந்த காட்சிகளை எல்லாம் சந்தானமும், கருணாஸும் இணைந்துதான் எழுதுனாங்க. ஆனால் இப்ப பார்க்கும்போது எவ்வளவு அபத்தமான விஷயங்களை காமெடின்னு பேசி இருக்கேன்னு தெரியுது. என வெளிப்படையாக பேசியுள்ளார் வெற்றிமாறன்.

To Top