Tamil Cinema News
வாடிவாசல் கதையில் நடந்த மாற்றம்.. இதுதான் கதையாம்..!
கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருந்த திரைப்படம் வாடிவாசல்.
வாடிவாசல் என்று வெளிவந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இப்பொழுது இந்த திரைப்படம் உருவாகாமல் இருந்து வருகிறது.
ஆனால் இந்த திரைப்படத்திற்காக 18 கோடி முன்பணமாக பெற்று இருக்கிறாராம் வெற்றிமாறன். இந்த நிலையில் இன்னும் படம் உருவாகாமல் இருப்பது ஒரு பிரச்சனையாகவே சென்று கொண்டே இருக்கிறது.
இதற்கு நடுவே சிம்பு வெற்றிமாறனின் திரைப்படம் அடுத்து துவங்கி இருக்கிறது இந்த படத்திற்குப் பிறகு மீண்டும் வாடிவாசலின் படபிடிப்பு துவங்க இருக்கிறது என்று பேச்சுகள் இருக்கின்றன.
ஆனால் வாடிவாசல் நாவலின் கதைகளத்தை வைத்து இந்த படம் நகரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாக வெற்றிமாறன் வேறு வகையான கதை ஒன்றை எழுதி இருக்கிறார் அந்த கதை தான் அடுத்து படமாக வர இருக்கிறது என்று கூறப்படுகிறது.
