Connect with us

இவ்வளவு பண விரயம் தேவையா? விடுதலை 2 பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்.!

bailvan ranganathan viduthalai 2

Tamil Cinema News

இவ்வளவு பண விரயம் தேவையா? விடுதலை 2 பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்.!

Social Media Bar

விடுதலை 2 திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியானது. இந்த படத்திற்கு ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. எப்பொழுது இந்த திரைப்படம் வெளியாகும் என்று மக்கள் காத்து வந்தனர்.

வடசென்னை திரைப்படம் மாதிரியே இந்த படமும் இரண்டாம் பாகம் வந்துவிடாமல் போய்விடுமோ என்கிற பயமும் ஒரு பக்கம் மக்களுக்கு இருந்தது.

ஏனெனில் விடுதலை திரைப்படமே மக்களிடம் அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை பேசி இருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர் மக்கள்.

விடுதலை 2 திரைப்படம்:

viduthalai 2

viduthalai 2

ஏனெனில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதை தான் முழுக்க முழுக்க செல்ல இருப்பதாக கூறப்பட்டது. வாத்தியார் என்கிற அந்த புரட்சிகரமான கதாபாத்திரத்தை பார்க்க வேண்டும் என்று மக்களுக்கும் ஆவல் வந்தது.

இன்று வெளியான விடுதலை 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று இருக்கிறது. பார்க்கும் மக்கள் எல்லோருமே படத்திற்கு நல்லபடியான வர விமர்சனத்தை அளித்து வருகின்றனர். பயில்வான் ரங்கநாதன் படம் குறித்து கூறும்பொழுது படத்தில் சீட்டின் நுனியில் அமர்ந்து படத்தை பார்ப்பது போல படம் அமைந்திருக்கிறது.

ஒரு காட்சிக்கு கூட நாம் சற்று நிதானமாக அமர்ந்து பார்க்க முடியவில்லை அவ்வளவு விறுவிறுப்பான கதை களத்தைக் கொண்டிருக்கிறது விடுதலை 2 திரைப்படம். ஆனால் இந்த திரைப்படத்தை இவ்வளவு நாட்கள் எடுத்திருக்க தேவையில்லை. இப்படி நாட்களை கடத்தி எடுப்பதால் தயாரிப்பாளருக்கு பணவிரயம் ஏற்படுகிறது.

எனவே இந்த விஷயத்தை வெற்றிமாறன் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

To Top