News
விடுதலை மூன்றாம் பாகம் வருதா? வெளிவந்த அப்டேட்..
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் சூரி, தமிழ் ரசிகர்களின் மனதில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர். விடுதலை பாகம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல நல்ல நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நகைச்சுவை நடிகர் என்றால் அது நடிகர் சூரி தான். அந்த வகையில் நகைச்சுவை நடிகராக தனக்கு பல ரசிகர்களை ஏற்படுத்தி வைத்திருந்த நடிகர் சூரி தற்போது பல படங்களிலும் முன்னணி நடிகராக நடித்து வருகிறார்.
இந்நிலையில் விடுதலை படத்தில் நடித்த மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகர் சூரி தற்போது விடுதலை படத்தின் அப்டேட் பற்றிய செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது.
நடிகராக அவதாரம் எடுத்த சூரி
இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜூமேனன், இளவரசு, பாலாஜி, சக்திவேல், சரவண சுப்பையா மற்றும் பல நட்சத்திரங்கள் திரைப்படத்தில் நடித்தனர். இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சிகளுக்கு இடையே நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. வணிக ரீதியாக நல்ல வசூலை பெற்று கொடுத்தது. இந்நிலையில் தான் விடுதலை பாகம் 2 வெளியாக உள்ள நிலையில் தற்போது விடுதலை பாகம் மூன்று பற்றிய அப்டேட் கிடைத்திருக்கிறது.
விடுதலை பாகம் 3
தற்போது விடுதலை பாகம் ஒன்றின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. ஆனால் படத்தில் பல கதாபாத்திரங்கள் தற்போது வந்துள்ள காரணத்தினால் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் இருப்பதால் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் மற்றும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பவானி, நடிக்கிறார்கள். மேலும் விடுதலை பாகம் 2ல் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சுவாரியர் உள்ள புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாகம் இரண்டு இன்னும் வெளிவராத நிலையில், விடுதலை பாகத்தின் மூன்றைப் பற்றிய பேச்சுக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு காரணம் விடுதலை பாகம் 2 படத்தின் நீளம் 4 மணி நேரமாக உள்ளதால், படத்தின் மூன்றாவது பாகம் வெளிவரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்னும் வெளிவராத நிலையில் தற்போது இது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
