தயாரித்த படத்தை வெளியிடுவதில் வந்த சிக்கல்!.. உதயநிதியோடு சேர்ந்து விஜய் ஆண்டனி எடுத்த முடிவு!..

Vijay Antony : தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

ஆரம்பம் முதலே அவரது பாடல்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வந்தது. இருந்தாலும் விஜய் ஆண்டனி நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால் தொடர்ந்து நடிக்கவும் ஆரம்பித்தார். அவரது முதல் திரைப்படமான நான் திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்ததால் விஜய் ஆண்டனி திரைப்படம் என்றாலே பார்க்கலாம் என்கிற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. அதனை தொடர்ந்து தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் முக்கியமானவராக விஜய் ஆண்டனி இருக்கிறார்.

Social Media Bar

தற்சமயம் விஜய் ஆண்டனி நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இன்னும் அவருக்கு அதிகமான வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. இது இல்லாமல் அவர் தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார். ஏற்கனவே அவர் நடித்த மூன்று திரைப்படங்கள் சில காரணங்களால் வெளியாகமல் இருக்கின்றது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி தயாரிப்பில் ரோமியோ என்கிற திரைப்படத்தை அவரே நடித்துள்ளார். அந்த திரைப்படத்தை வெளியிடலாம் என யோசிக்கும் பொழுது ஏற்கனவே எடுக்கப்பட்ட மூன்று திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் இதனால் பிரச்சனை செய்வார்களோ என்று யோசித்த விஜய் ஆண்டனி தற்சமயம் அந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறார்.

அவர்களிடம் இந்த திரைப்படத்தை வெளியிட்டு தருமாறு கேட்டு இருக்கிறார் இன்னும் சில மாதங்களில் அந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.