Latest News
ஆறு பேருக்கு எக்கச்சக்கமா பணம் கொடுத்தார் விஜய்!.. இப்ப வரைக்கும் வெளில தெரியாது!.. உண்மையை சொன்ன தயாரிப்பாளர்!.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராவார். தற்சமயம் அவர் நடிக்கும் படங்களுக்குதான் தமிழ் சினிமாவிலேயே அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட்.
இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் இன்னும் ஒரு படத்தில் நடிப்பார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் அரசியலுக்கு வந்த விஜய் தொடர்ந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார். ஏன் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இப்படி நன்மைகள் செய்யவில்லை என சிலர் இதுக்குறித்து கேள்விகள் கேட்பதுண்டு.
இந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் சௌந்தர் ராஜன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்த சௌந்தர ராஜன் பிறகு விநியோகஸ்தராக இருந்து வந்தார். ஜில்லா திரைப்படம் வெளியான சமயத்தில் முக்கியமான 6 விநியோகஸ்தர்களை தனியாக அழைத்தார் விஜய்.
அவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்த சௌந்தர் ராஜன் கூறும்போது விஜய் இன்னும் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார் என கூறுகிறார்.