Tamil Cinema News
விஜய் சேதுபதியோட படம் பண்ண முடியாது.. மறைமுகமாக தாக்கி பேசிய இயக்குனர் சேரன்.!
தமிழில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த விடுதலை 2 மற்றும் மகாராஜா ஆகிய திரைப்படங்கள் வெகுவாக பேசப்பட்டது.
மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஓ.டி.டி மூலமாக உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் விஜய் சேதுபதி இன்னமும் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சேரன் ஒரு பேட்டியில் பேசும் பொழுது அவரிடம் நீங்களும் விஜய் சேதுபதியும் சேர்ந்து படம் பண்ணுவதாக இருந்தது அது என்ன ஆயிற்று என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சேரன் அதற்கெல்லாம் இப்பொழுது வாய்ப்புகள் இல்லை நிறைய மாறிவிட்டது. உள்ளுக்குள் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. விஜய் சேதுபதி மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார்.
அவரிடம் வாய்ப்பு வாங்குவது கடினம் இன்னும் பத்து வருடத்திற்கு அவரிடம் வாய்ப்பே வாங்க முடியாது என்று விஜய் சேதுபதியை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் சேரன். இதன் மூலமாக இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
