Latest News
விஜய்யை விட விஜய் சேதுபதி நல்லவர் போல!.. நாங்கதான் காப்பாத்துனோம்!. ஆடி போன விஜய் சேதுபதி!..
இப்போது தமிழ் சினிமா நடிகர்களுக்கு சொகுசுக்காக வழங்கப்படும் எந்த ஒரு விஷயங்களும் முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கிடையாது. விஜயகாந்த் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவர் 100 திரைப்படங்கள் நடித்து முடிக்கும் வரையில் ஒரு குடிசையில் தான் கட்டிலை போட்டு அமர்ந்திருப்பாராம்.
உதவி இயக்குனர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அனைவரையும் அங்கு வந்துதான் விஜயகாந்தை சந்திக்க முடியும். கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு பிறகுதான் தனக்கென்று தனியாக அலுவலகத்தை தயார் செய்தாராம் விஜயகாந்த்.
அதேபோல அப்போதெல்லாம் கேரவன் என்கிற சொகுசு வண்டி நடிகர்களுக்கு கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து மீத நேரங்களில் ஒரு குடையை வைத்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள் நடிகர்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது.
ஒரு நடிகர் என்றால் அவருக்கு தங்குவதற்கு கேரவன் பாதுகாப்பிற்கு ஆட்கள் என்று எக்கசக்கமான விஷயங்கள் இருக்கின்றன. அதே அளவிற்கு ரசிகர்களின் கூட்டமும் தற்சமயம் முன்பை விட அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் பவுன்சர் என அழைக்கப்படும் பாதுகாவலர்கள் ஒவ்வொரு துறை பிரபலங்களுக்கும் தேவையாக இருக்கின்றனர்.
அப்படியாக ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கு பவுன்சர்களை வைத்துக் கொள்வது உண்டு. இந்த நிலையில் அந்த பவுன்சர்கள் பேட்டியில் கூறும் பொழுது விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடையே உள்ள வித்தியாசத்தை கூறி இருக்கின்றனர்.
விஜய் சேதுபதியின் மனசு:
விஜய்யை பொறுத்தவரை அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு நிறைய ஆசைகள் இருக்கும். அதிலும் ஒரு முறை விஜய் கேப்டன் தோனியை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவருடனும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிக ஆசை இருந்தது. ஏனெனில் அவர்கள் இருவரையும் சேர்ந்து சந்திப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.
இருந்தாலும் எங்களால் அதெல்லாம் செய்ய முடியாது அதே சமயம் விஜய் சேதுபதியை பொருத்தவரை அவர் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்பு அங்கு இருக்கும் பௌன்சர்களை எல்லாம் அழைத்து அவர்களுடன் அவரே ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு செல்லக்கூடியவர் விஜய் சேதுபதி.
ஒருமுறை விஜய் சேதுபதி நிகழ்ச்சி எல்லாம் முடிந்து நாங்கள் அழைத்து வந்து கொண்டிருந்த பொழுது திடீரென்று 40 பேர் கொண்ட கூட்டம் அவரை நோக்கி ஓடி வர துவங்கியது. அதனை பார்த்து விஜய் சேதுபதி பயந்துவிட்டார். அப்பொழுது சுற்றி நின்ற நாங்கள் அனைவரும் அவருக்கு ஒரு அரண் போல நின்று ஒரு ஆள் கூட விஜய் சேதுபதியை தொட முடியாத அளவிற்கு பார்த்துக் கொண்டோம் என்று கூறுகின்றனர் அந்த பௌன்சர்கள்.