Connect with us

விஜயகாந்த் அந்த விஷயத்தில் பயங்கர டெரர்.. எல்லாத்தையும் செக் பண்ணுவாரு..!

Tamil Cinema News

விஜயகாந்த் அந்த விஷயத்தில் பயங்கர டெரர்.. எல்லாத்தையும் செக் பண்ணுவாரு..!

Social Media Bar

நடிகர் விஜயகாந்தை பொருத்தவரை அவர் உயிரோடு இருந்த பொழுது கூட அவரை குறித்து நிறைய நல்ல விஷயங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.

ஆனால் அவர் இறந்த பிறகு அவரைக் குறித்த நிறைய நல்ல விஷயங்களை தொடர்ந்து திரைப்படத்துறையில் உள்ளவர்கள் பகிர்ந்து வருகின்றனர் விஜயகாந்த் மாதிரியான ஒரு மனிதரை திரைத்துறையில் இனி யாரும் பார்க்க முடியாது என்கிற அளவிற்கான ஒரு வாழ்க்கையை தான் விஜயகாந்த் வாழ்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் விஜயகாந்த் குறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர் மற்றும் விஜயகாந்த் இருவரும் இணைந்து ஒரு உணவகத்தை துவங்கினர்.

அந்த உணவகத்தில் இருந்து தினமும் 500 சாப்பாடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அதிலிருந்து 250 தயிர்சாதமும் 250 புளிசாதமும் பொட்டலம் கட்டி வெளியில் வரும்.

அப்படி வந்த பிறகு அங்கு இருக்கும் ஊழியரை அழைத்த விஜயகாந்த் அந்த பொட்டலத்தில் மேலேயும் கீழேயும் எந்த பொட்டலத்தையும் எடுக்க வேண்டாம். அதை நல்லபடியாகதான் செய்திருப்பார்கள் நடுவில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து வாருங்கள் என்று கூறி அதில் இருக்கும் தயிர் சாதத்தை எடுத்து சாப்பிட்டு பார்ப்பார்.

அது நன்றாக இருந்தால் தன் அந்த உணவை அனுப்புவதற்கு ஒப்புக்கொள்வார் அப்படிப்பட்ட மனிதர் விஜயகாந்த் என்று விஜயகாந்தை குறித்து அவரது நண்பர்கள் கூறுகின்றனர்

To Top