Connect with us

படப்பிடிப்பில் பலாரென்று அறைந்த விஷால்… கதறி அழுத நடிகை சமந்தா.. இவரோட இன்னொரு முகம் இதுதானா ?

Tamil Cinema News

படப்பிடிப்பில் பலாரென்று அறைந்த விஷால்… கதறி அழுத நடிகை சமந்தா.. இவரோட இன்னொரு முகம் இதுதானா ?

Social Media Bar

Actor Vishal is one of the emerging actors in Tamil cinema. There was an incident where he scared the heroine while shooting for a film

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர் விஷால். நடிகர் விஷால் செல்லமே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக அறிமுகமானவர் ஆவார்.

அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நடிகர் விஷாலை பொருத்தவரை பெரும்பாலும் ஆக்ஷன் திரைப்படங்களைதான் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

ஏனெனில் அவர் அதிக உயரத்துடன் இருப்பதால் அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் அவருக்கு எளிதாக செட் ஆகி விடுகின்றன. இந்த நிலையில் படபிடிப்புகளில் ஏதாவது ஒரு காமெடி செய்து கொண்டிருப்பதை விஷால் வேலையாக வைத்திருக்கிறார்.

உண்மையை பகிர்ந்த ரோபோ சங்கர்:

இதை குறித்து விஷாலுடன் பணி புரிந்த ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இரும்புத்திரை திரைப்படம் வெளியான பொழுது வேண்டுமென்றே சமந்தாவை வம்பு இழுக்க நினைத்தார் விஷால். எனவே அவர் என்னிடம் வந்து அந்த நடிகை இருக்கும்பொழுது அவருக்கு பக்கத்தில் வந்து நீங்கள் நில்லுங்கள்.

நான் உங்களை அடிப்பேன் என்று என்னிடம் முன்பே சொல்லிவிட்டார். நானும் அதன்படியே போய் நின்றேன். உடனே எழுந்து என்னை பலார் என்று அறைந்தார் விஷால். பிறகு மதியம் எங்கே சென்றீர்கள் என்று கேட்டார்.

நான் உணவு சாப்பிட சென்றேன் என்று கூறினேன் உடனே இங்கு பல கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறார்கள் உங்களுக்கு சாப்பாடு தான் முக்கியமா என்று என்னிடம் சத்தம் போட்டார். நானும் கண்ணீர் விட்டு அழுவது போல நடித்தேன். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமந்தா இன்று மாலையே எனக்கு டிக்கெட் போடுங்கள்.

நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறினார் பிறகு சமந்தாவை கூப்பிட்டு இது சும்மா காமெடிக்காக செய்தது என்று சமாதானப்படுத்தினேன் என்று கூறியிருக்கிறார் ரோபோ சங்கர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top