Tamil Cinema News
என்னை ரெண்டு பேரும் ரொம்பவே அழ வச்சிட்டாங்க.. அதிதி ஷங்கர் குறித்து விஷ்ணுவர்தன்..!
தமிழ் சினிமாவில் விஷ்ணுவர்தன் இயக்கிய திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. முதன் முதலாக குறும்பு என்கிற திரைப்படத்தை இயக்கினார் விஷ்ணுவர்தன்.
ஆனால் அந்த படம் அவ்வளவாக வெற்றியை பெற்று தரவில்லை. அதற்கு பிறகு அவர் இயக்கிய அறிந்தும் அறியாமலும், பட்டியல் மாதிரியான படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்றார் விஷ்ணுவர்தன்.
அப்படியாக அடுத்து அவர் இயக்கிய பில்லா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் தற்சமயம் அதிதி ஷங்கர் மற்றும் ஆகாஷ் முரளி நடிப்பில் நேசிப்பாயா என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார் விஷ்ணுவர்தன்.
இதுக்குறித்து ஒரு நேர்க்காணலில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது முதலில் இவர்கள் இருவரும் ஜோடியாக செட் ஆவார்களா? என யோசித்தேன். ஆனால் படத்தின் முதல் ஷாட்டிலேயே இவர்கள் சரியான ஜோடி என தெரிந்தது.
ஆனால் படம் முடிவதற்குள் என்னை மிகவும் அழ வைத்துவிட்டனர். அந்த அளவிற்கு அவர்களது நடிப்பு இருந்தது என கூறியுள்ளார் விஷ்ணுவர்தன்.
