Connect with us

படத்துல லாரன்ஸ் காட்டுவாசி.. 1975 ல நடக்குற கதை!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்..

jigarthanda 2

Cinema History

படத்துல லாரன்ஸ் காட்டுவாசி.. 1975 ல நடக்குற கதை!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்..

cinepettai.com cinepettai.com

பீட்சா திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு பிறகு அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் தேசிய விருதை பெற்றது மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கதையமைப்பை கொண்டு மற்றொரு திரைப்படம் எடுத்தால் என்ன என்று யோசித்த கார்த்திக் சுப்புராஜ் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

கதைப்படி 1975 இல் நடக்கும் கதையாக இந்த படம் இருக்கிறது. படத்தில் இந்தியாவின் பிரபல இயக்குனரான சத்யஜித்ரேவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த நபராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். அவர் பழங்குடிகளை பற்றி ஒரு படம் எடுப்பதற்காக லாரன்ஸை தேடி வருகிறார்.

ஏனெனில் லாரன்ஸ் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த விஷயங்களை எல்லாம் தனது பேட்டியில் கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். எனவே இதை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் சுவாரஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

POPULAR POSTS

gv prakash
jonita
ajith
lingusamy kamalhaasan1
karthik subbaraj
To Top