Connect with us

சும்மா வினுஷா வினுஷான்னு சொன்னா சொருகிடுவேன் பார்த்துக்க!.. கொலை மிரட்டல் விட்ட நிக்சன்!.. அந்த ரெட் கார்டு தூக்குன கேங் எங்கப்பா!.

bigg boss archana nixen

Bigg Boss Tamil

சும்மா வினுஷா வினுஷான்னு சொன்னா சொருகிடுவேன் பார்த்துக்க!.. கொலை மிரட்டல் விட்ட நிக்சன்!.. அந்த ரெட் கார்டு தூக்குன கேங் எங்கப்பா!.

cinepettai.com cinepettai.com

Biggboss tamil archana and nixen: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோவில் பார்க்கும் பொழுது மிகவும் அத்து மீறி சென்றுள்ளது நிக்சனின் பேச்சு.

 பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது முதலே பெண்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. ஏனெனில் தொடர்ந்து பெண்களை உருவ கேலி செய்தும் தவறாக பேசியும் வருகிறார் நிக்சன்.

ஏற்கனவே வினுஷா குறித்து அவர் பேசிய பேச்சுக்கள் மக்கள் மத்தியிலும் சரி வினிஷா மத்தியிலும் சரி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது வினுஷாம் கூட ஒரு யூட்யூப் பேட்டியில் பேசும்பொழுது இது குறித்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் அந்த வீட்டிற்கு வைல்ட் கார்டு மூலமாக வந்த அர்ச்சனா வினுஷாவை நிக்சன் தவறாக பேசியது குறித்து சில வார்த்தைகளை பேசி இருந்தார். இது நிக்சனுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று பிரச்சனை அதிகரித்துள்ளது.

ஆனால் அர்ச்சனா வந்த நாள் முதல் அவர் கண்ணீர் விட்டு அழுததை தொடர்ந்தது நக்கல் செய்து வந்தார் நிக்சன். அது மட்டும் தவறு இல்லையா என்று கேட்கும் நெட்டின்சன்கள் நிக்சன் பேசியது உண்மை தானே அதை தானே அர்ச்சனா எடுத்துக் கூறுகிறார் என்றும் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  அர்ச்சனாவை போடி வாடி என்று திட்டிய நிக்சன் இன்னும் எல்லை கடந்து மூஞ்ச பாக்கவே கடுப்பா இருக்கு கருமமா இருக்கு என்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார். மேலும் திரும்பத் திரும்ப வினுஷா என்று கூறினால் சொருகிடுவேன் பாத்துக்கோ என்று கூறியிருக்கிறார்.

இதை கிட்டத்தட்ட ஒரு கொலை மிரட்டலாகவே தெரிகிறது பெண்கள் விஷயத்தில் கமல்ஹாசன் உடனடி நடவடிக்கை எடுக்கக் கூடியவர் என்று பேசப்பட்டாலும் சென்ற வாரம் விசித்ரா தனக்கு சினிமாவில் நடந்த பிரச்சனை குறித்து பேசும்பொழுது அதற்கு பெரிதாக எந்த ஒரு ரியாக்ஷம் செய்யாமல் இருந்ததால் ஆண்டவர் இந்த நிலையில் எந்த பிரச்சனையாக பேசுவாரா என்று கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்காக ரெட் கார்டு தூக்கிய குழு இப்போது என்ன தூங்கி கொண்டுள்ளதா? என்பதே அவர்களது கேள்வியாக உள்ளது.

To Top