ar rahman vairamuthu

அந்த ஒரு பாட்டுக்கு இவ்வளவு பஞ்சாயத்தா!.. வைரமுத்து ஏ.ஆர் ரகுமான் பிரச்சனையில் சிக்கிய ஹரிஹரன்!..

Cinema History Tamil Cinema News

Vairamuthu and AR Rahman : பாடல்களை இசையமைப்பதை பொருத்தவரை அதில் இசையமைப்பாளருக்குதான் எப்போதுமே பெரும் பங்கு உண்டு. ஒரு பாடல் என்ன ராகத்தில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு இசை அமைப்பாளர் முடிவு செய்ததுதான் அமையும்.

பாடல் வரிகளைதான் பாடலாசிரியர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு அது ஒரு பாடலகர்களால் பாடப்படும். ஆனால் முக்கியமான ஆள் இதில் இசையமைப்பாளர்தான் அதனால்தான் ஒரு பாட்டு யாருக்கு சொந்தம் என்று கேட்டால் அது இசையமைப்பாளருக்கு தான் சொந்தம் என கூறப்படுகிறது.

வைரமுத்துவும் ஏ.ஆர் ரகுமானும் ஒன்றாக சேர்ந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கின்றனர். வைரமுத்துவிற்கு இளையராஜா உடன் பிரச்சனையை ஏற்பட்ட பிறகு அவர் தொடர்ந்து ஏ.ஆர். ரகுமானின் திரைப்படங்களுக்கு பாடல் வரிகளை எழுத தொடங்கினார்.

இந்த நிலையில் ரட்சகன் திரைப்படத்திற்கும் அவர்கள் இருவரும் இணைந்துதான் பணிபுரிந்தனர். அதில் சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்கிற ஒரு பாடலுக்கு வரிகளை வைரமுத்து எழுதிய போது அது ஏ.ஆர் ரகுமானிற்கு பிடிக்கவில்லை.

இந்த ஆம்ஸ்ட்ராங்கா என்பதை எடுத்துவிட்டு வேறு ஏதாவது போட முடியுமா என்று பாருங்களேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் வைரமுத்துவிற்கு இந்த பாடல் வரிகள் சரியாக இருப்பதாக தோன்றியது. அது குறித்து ஏ.ஆர் ரகுமான் கூறும் பொழுது பாடுபவருக்கு இந்த பாடல் ஆம்ஸ்ட்ராங் எனும் வார்த்தை கொஞ்சம் கடுமையானதாக இருக்கும் என்றார்.

அதை பாடகர் இடமே நாம் கேட்டு விடுவோம் என்று கூறியிருக்கிறார் வைரமுத்து. இந்த நிலையில் அந்த பாடலை பாடகர் ஹரிஹரன் தான் பாடுவதாக இருந்தது. அவர் வரிகளை கேட்ட உடனேயே சிறப்பான பாடல் வரிகள் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதை மிக எளிமையாக பாடியும் காட்டி இருந்தார் கடைசியாக ஹரிஹரன் வந்த பிறகு தான் அந்த சண்டையும் முடிந்தது.