Connect with us

நைட் 1 மணிக்கு கோவில் வாசல்ல உக்காந்து கவுண்டமணி என்கிட்ட அழுதார்… இன்னும் மறக்க முடியல… பாக்கியராஜ்க்கு நடந்த நிகழ்வு!..

gaundamani bagyaraj

Cinema History

நைட் 1 மணிக்கு கோவில் வாசல்ல உக்காந்து கவுண்டமணி என்கிட்ட அழுதார்… இன்னும் மறக்க முடியல… பாக்கியராஜ்க்கு நடந்த நிகழ்வு!..

cinepettai.com cinepettai.com

Gaundamani and Baghyaraj : தமிழில் குடும்ப சினிமா ஆடியன்ஸ்க்கு மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். இப்போது இருக்கும் எந்த இயக்குனருக்கும் இருக்கும் வரவேற்பை விட அதிகமான வரவேற்பு பாக்கியராஜுக்கு இருந்தது என்று கூறலாம்.

அப்போதெல்லாம் வார இறுதி நாட்களில் பாக்கியராஜை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு முன்பு கிலோமீட்டர் கணக்கில் மக்கள் கூட்டமாக நிற்பார்கள் என்று கூறப்படுவதுண்டு. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றவராக பாக்கியராஜ் இருந்திருக்கிறார்.

bhagyaraj
bhagyaraj

ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பாக்கியராஜ் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த சாதாரண மனிதராகத்தான் இருந்திருக்கிறார். சின்ன வயதிலேயே நாடகங்களை பார்ப்பதில் ஆர்வமுடன் இருந்த பாக்கியராஜ் அதேபோல திரைப்படத்தையும் எளிதாக இயக்கி விட முடியும் என்று சென்னைக்கு வந்தார்.

சென்னைக்கு வரும்பொழுது கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையுடன்தான் அவர் வந்தார். ஆனால்  அவ்வளவு எளிதாக எல்லாம் கதாநாயகனாக ஆகிவிட முடியாது என்பது பிறகுதான் பாக்யராஜுக்கு தெரிந்தது.

எனவேதான் பிறகு இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் பாக்யராஜ். பாக்கியராஜ் உதவி இயக்குனராக இருந்த சமகாலத்தில் கவுண்டமணியும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.

கவுண்டமணிக்கு செய்த உதவி:

அப்பொழுது கவுண்டமணியும் பாக்கியராஜும் ஒரே அறையில்தான் தங்கி இருந்தனர். அப்போது பாக்யராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் 16 வயதினிலே திரைப்படத்தில் தனக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று தொடர்ந்து பாக்யராஜிடம் கேட்டுக் கொண்டிருந்தார் கவுண்டமணி.

gaundamani-senthil
gaundamani-senthil

இதனால் அவரும் இயக்குனர் பாரதிராஜாவிடம் பேசி ஒரு வழியாக கவுண்டமணிக்கு வாய்ப்பை வாங்கி கொடுத்தார். வாய்ப்பு கிடைத்த அன்று பாக்யராஜ் நடு இரவில் கவுண்டமணியை ஒரு கோயிலுக்கு அழைத்து வந்து அங்கு கற்பூரம்  ஏற்ற சொல்லிவிட்டு இந்த நல்ல செய்தியை கூறியிருக்கிறார்.

உடனே அங்கேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அழத் துவங்கிய கவுண்டமணி இந்த வாய்ப்புக்காக பல வருடங்களாக காத்திருந்தேன் என்று கூறி பாக்யராஜிடம் நன்றி கூறியிருக்கிறார். அந்த நாளை என்றுமே மறக்க முடியாது என்று பாக்கியராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். 

POPULAR POSTS

ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
To Top