Connect with us

ஏண்டா நாய்க்கு வைக்குற சீனெல்லாம் ஹீரோவுக்கு வைக்கிறீங்க!.. சுந்தர் சி காட்சியால் கடுப்பான கவுண்டமணி!.

sundar c gaundamani

Latest News

ஏண்டா நாய்க்கு வைக்குற சீனெல்லாம் ஹீரோவுக்கு வைக்கிறீங்க!.. சுந்தர் சி காட்சியால் கடுப்பான கவுண்டமணி!.

cinepettai.com cinepettai.com

தமிழில் காமெடி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. படம் முழுக்க காமெடி காட்சிகளை மட்டுமே வைத்து சுவாரஸ்யமான ஒரு திரைப்படத்தை அவரால் கொடுக்க முடியும்.

அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் உள்ளத்தை அள்ளித்தா. உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக அமைந்திருந்தது. இதனாலேயே அந்த திரைப்படத்தில் எமோஷனலான காட்சிகளே பெரிதாக இல்லையே என்கிற கேள்விதான் முதலில் சுந்தர் சிக்கு எழுந்தது.

sundar-c
sundar-c

இந்த நிலையில் அந்த படம் வெற்றி பெறுமா என்பதே சுந்தர் சி க்கு சந்தேகமாக இருந்தன. இந்த நிலையில் வெளியான ஒரு வாரத்திற்கு அந்த படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் பெரும் வெற்றியை கொடுத்தது உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம்.

விமர்சித்த கவுண்டமணி:

இதனை தொடர்ந்து செண்டி மெண்டாக ஒரு படம் இயக்க வேண்டும் என்று சுந்தர் சி இயக்கிய திரைப்படம் கண்ணன் வருவான். அந்த படத்தில் ஒரு காட்சியில் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் கார்த்திக்கு வெளிநாட்டு உணவுகளை வைத்து விருந்து வைத்திருப்பார்கள்.

ஆனால் கார்த்தி அதை உண்ணாமல் அவரது பாட்டி செய்த பால் சோறை உண்பார். இந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு அதை பார்த்து கடுப்பான கவுண்டமணி யோவ் உங்களுக்குதான் செண்டிமெண்ட் வராதுல. அப்புறம் எதுக்குய்யா ட்ரை பண்றீங்க.

எங்க ஊர்ல நாய்க்குதான்யா பால் சோறு வைப்பாங்க. ஏதோ காமெடி படமா இருக்கும்னு வந்தா இந்த படம் ஒரே கண்ணீரா இருக்கும் போலயே என கூறியுள்ளார் கவுண்டமணி.

POPULAR POSTS

shakshi agarwal
simbu maniratnam
vijay
irfan view
sivakarthikeyan
ajith
To Top