Connect with us

நான் ஊர்ல இல்லாத சமயமா பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க – மணிரத்னம் ஏ.ஆர் ரகுமான் குறித்து வைரமுத்து குற்றச்சாட்டு!

Cinema History

நான் ஊர்ல இல்லாத சமயமா பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க – மணிரத்னம் ஏ.ஆர் ரகுமான் குறித்து வைரமுத்து குற்றச்சாட்டு!

cinepettai.com cinepettai.com

ஏ.ஆர் ரகுமான், மணிரத்னம், வைரமுத்து காம்போ என்பது 25 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்து வரும் ஒரு கூட்டணி ஆகும். ரோஜாவில் துவங்கி பல படங்கள் இவர்கள் மூவரும் ஒன்றாகவே பயணித்தனர்.

இறுதியாக வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மட்டும் பாடலாசிரியரை மாற்றியிருந்தனர்.  இவர்கள் கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு வந்த திரைப்படம்தான் ஓ காதல் கண்மணி.

ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் அடித்தன. அந்த படத்தில் மெண்டால் மனதில் என்ற பாடலுக்கு மட்டும் ஏ.ஆர் ரகுமானும், மணிரத்னமும் சேர்ந்து பாடல் வரிகளை எழுதி இருந்தனர்.

இதுக்குறித்து ஒரு பேட்டியில் வைரமுத்துவிடம் கேட்கப்பட்டது. அப்போது வைரமுத்து கூறும்போது நான் விடுமுறை எடுத்துக்கொண்டு அப்போது வெளிநாட்டிற்கு சென்றிருந்தேன். அந்த சமயம் பார்த்து இவர்களே பாடல் வரிகளை எழுதிவிட்டனர்.

இதன் மூலம் தெரிந்துக்கொண்ட விஷயம் என்னவென்றால் இனி பாடல் எழுதுகிற காலத்தில் நான் வெளியூருக்கு செல்ல கூடாது” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார் வைரமுத்து.

வைரமுத்து பாடல் வரிகள் எழுதவில்லை என்றாலும் அந்த பாடலும் நல்ல ஹிட் கொடுத்தது.

POPULAR POSTS

kurangu pedal
nani rajinikanth
aranmanai 4
kavin star
vijay ajith
ajith
To Top