News
தொடர்ந்து லெட்டர் வந்துட்டு இருந்துச்சு… அப்புறம் வீட்டுக்கே வந்துட்டார்!.. கீர்த்தி சுரேஷ்க்கு லவ் டார்ச்சர் கொடுத்த மர்ம நபர்!.
Keerthy suresh: தமிழில் குறைந்த காலங்களிலேயே பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் திரைப்படம் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு திருப்புமுனையான திரைப்படம் என்னலாம் அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அதிகமான பட வாய்ப்புகளை பெற துவங்கினார்.
அதனை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து சர்கார் பைரவா ஆகிய படங்களில் நடித்தார். நடிகர் விக்ரமுடன் சேர்ந்து சாமி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி தொடர்ந்து பெரும் கதாநாயகர்களுடன் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இறுதியாக மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியிருந்தார். வெகு நாட்களாக ஒரு நபர் கீர்த்தி சுரேஷிற்கு காதல் கடிதம் எழுதி வந்தாராம். அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு அந்த கடிதம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததாம்.
அந்த நபர் அவரது பெயரை போட்டே அந்த கடிதத்தை அனுப்பி கொண்டிருந்தாராம். பிறகு ஒருநாள் அந்த நபர் கீர்த்தி சுரேஷை தேடி அவருடைய வீட்டிற்கே வந்து விட்டாராம். ஆனால் அப்பொழுது கீர்த்தி சுரேஷ் அவரது வீட்டில் இல்லையாம்.
இந்த நிலையில் அந்த நபர் கீர்த்தி சுரேஷ் வீட்டில் வேலை பார்ப்பவர்களிடம் எதற்கு அவள் இந்த படங்களில் எல்லாம் நடிக்கிறாள் என்று மனைவிக்கு கட்டளை இடுவது போல விசாரித்துவிட்டு சென்றுள்ளார் இந்த விஷயத்தை கீர்த்தி சுரேஷ் பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.
