Connect with us

இந்தியன்னாலே மோசமானவங்க!.. தப்பா பேசுன வெளிநாட்டு காரரை தட்டி கேட்ட அப்பாஸ்!..

Cinema History

இந்தியன்னாலே மோசமானவங்க!.. தப்பா பேசுன வெளிநாட்டு காரரை தட்டி கேட்ட அப்பாஸ்!..

Social Media Bar

திரையுலகில் அறிமுகமாகும்போது எந்த ஒரு நாயகனுக்கும் முக்கியமான விஷயமாக இருப்பது அவர்களது முதல் படம்தான். முதல் படம் தரும் வெற்றிதான் அவர்கள் பெரும் உயரத்தை தொடுவதற்கு உதவுகிறது. அப்படி நடிகர் அப்பாஸ்க்கு முதல் படமாக இருந்தது காதல் தேசம்.

முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடிக்க துவங்கினார். அதிகமான திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். ஆனால் அவர் தேர்ந்தெடுத்த கதைகள் பலவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழக்க துவங்கினார் அப்பாஸ். அதன் பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

அதன் பிறகு மொத்தமாக சினிமாவை விட்டு விலகினார் அப்பாஸ். அதனை தொடர்ந்து வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆனார். வெளிநாட்டில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார் அப்பாஸ். தற்சமயம் மீண்டும் தமிழகத்திற்கு திரும்பியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவரது வேலை அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஒருமுறை கால் செண்டரில் வேலை பார்த்தப்போது அவருக்கு போன் செய்த நபர் இந்தியா குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் கடுப்பான அப்பாஸ் அவரை திட்டிவிட்டார். அதன் பிறகு அதை விசாரித்த நிர்வாகம் அப்பாஸ் மீது எந்த தவறும் இல்லை என கூறிவிட்டது.

இந்த விஷயத்தை அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top