Latest News
இத்தனை தடவை உத்தம வில்லன் பார்த்தும் இதை கவனிச்சது கிடையாது!.. வியக்க வைத்த நடிகர் மணிகண்டன்!..
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகராவார். அவர் நடித்த பல படங்களில் பொதுவாக பல விஷயங்களை அவர் பேசியிருப்பார். ஆனால் மேலோட்டமாக படத்தை பார்க்கும்போது அது புரியாது.
அப்படியாக உத்தம வில்லன் திரைப்படத்தில் நுட்பமாக கமல்ஹாசன் காட்சிப்படுத்திய விஷயங்களை விளக்கியுள்ளார் நடிகர் மணிக்கண்டன். அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல்ஹாசன் இரணியனாக நடித்திருப்பார் கமல்ஹாசன்.
எவ்வளவோ நாடகங்கள் இருக்கும்போது கமல்ஹாசன் ஏன் இரணியன் நாடகத்தை போட வேண்டும். ஏனெனில் அவரது வாழ்க்கைக்கும் அவர் நடிக்கும் அந்த படத்திற்கும் இடையே நிறைய தொடர்பு இருக்கும். இரணியன் கதையை பொறுத்தவரை தனது மகன் தன் முன் வேறொருவனை புகழ்வதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தன் மகன் தன்னைதானே புகழ வேண்டும் என்கிற ஆதங்கம் இருக்கும். அதே போல கமல்ஹாசனின் மகளான பார்வதி கமல்ஹாசனை அப்பா என்று அழைக்க மாட்டார். மாறாக ஜெய்ராமைதான் அப்பா என அழைப்பார். அந்த இடத்தில் இரணியன் பட்ட துன்பத்தை கமலின் கதாபாத்திரமும் படும்.
இதே போல ஒரு காட்சியில் மீன் பிடித்து கொண்டிருப்பதை கமல் பார்த்துக்கொண்டிருப்பார். அந்த மீன் படகில் விழுந்து துடித்துக்கொண்டிருக்கும். அதே சமயம் கமலின் மூக்கில் இருந்து ரத்தம் வரும். எப்படி அந்த மீன் வாழ்வா சாவா என துடித்துக்கொண்டுள்ளதோ அதே போல கமலும் புற்றுநோயால் வாழ்வா சாவா என்கிற நிலையில் இருப்பார்.
இப்படி பல விஷயங்களை அந்த படம் விரிவாக பேசுகிறது என்கிறார் மணிகண்டன்.