Connect with us

விஜய்யை விரட்டிய மண்ணில் பாராட்டு வாங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!.. இதுதான் மாஸ்!..

lawrence vijay

News

விஜய்யை விரட்டிய மண்ணில் பாராட்டு வாங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!.. இதுதான் மாஸ்!..

Social Media Bar

Actor Ragavava lawarance: தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து பிறகு பெரும் நடிகராக மாறியவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸை பொருத்தவரை ஆரம்பத்தில் நடன கலைஞர்களுக்கு எடுபிடி வேலை பார்க்கும் ஒரு நபராகதான் இருந்து வந்தார்.

அவருக்கு தமிழ் சினிமாவில் நடனமாடும் குழுவில் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். அதனால்தான் ரஜினிகாந்த் மீது எப்போதுமே பேரன்பு கொண்டிருப்பார் நடிகர் லாரன்ஸ். தமிழ் சினிமாவில் பிரபலமான நடன கலைஞராக மாறிய பிறகு தொடர்ந்து நடிகராகவும் நடிக்க துவங்கினார்.

raghava-lawarance
raghava-lawarance

பிறகு கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். அது அவருக்கு நல்ல வெற்றியையும் பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து இயக்குனராக மாறினார் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ஏக்கச்சக்கமான உதவிகளை செய்து வருகிறார். இது பலரும் அறிந்த விஷயம்.

அதேபோல அவர் இயக்கும் திரைப்படங்களில் இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நடனம் ஆடுவதற்கு வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதேபோல் அவரைச் சுற்றியுள்ளவர்கள் பலரும் வளர்வதற்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு அதிக உதவி:

அவரது தம்பி தற்சமயம் நடித்து வரும் திரைப்படத்தில் கூட அவருக்காக கூட சேர்ந்து நடித்திருக்கிறார். அதேபோல விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் திரைப்படத்திலும் அவருக்காக நடித்திருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில் தற்சமயம் விழுப்புரம் சென்ற நிலையில் அங்கு ரசிகர்களுக்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்து அங்கு ரசிகர்களுக்கு பிரியாணி சாப்பாடு எல்லாம் போட்டதுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

raghava-lawarance
raghava-lawarance

இது குறித்து அவர் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார். அப்படி அதில் பேசும்போது ரசிகர்கள்தான் நமது கடவுள் அவர்கள் தான் நம்மை வளர்த்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கூறும் லாரன்ஸ் அடுத்து தொடர்ந்து பல மாவட்டங்களில் இதே போல விழா ஏற்பாடு செய்து ரசிகர்களுக்கு உணவு அளித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

ஒரு காலத்தில் ரசிகர்கள் துரத்தியதால் விஜய் சுவர் ஏறி குதித்து ஓடிய ஊர்தான் விழுப்புரம். அப்படிப்பட்ட விழுப்புரத்தில் இப்படி ரசிகர்களுக்கு சாப்பாடு போட்டு பேர் வாங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்

Articles

parle g
madampatty rangaraj
To Top