மாடில இருந்துக்குட்டு நாலு வருஷமா என்ன படுத்திக்கிட்டு இருக்கான்!.. செந்தில் வீட்டில் நடக்கும் கொடுமை!..
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பெரிதாக இடத்தை பிடித்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் செந்தில், கவுண்டமணியோடு செந்தில் இருந்தால்தான் கவுண்டமணிக்கு பெருமை என்பது போல அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவைகள் இப்போதும் பிரபலமானவை.
இன்னசென்டாக மூஞ்சை வைத்துக்கொண்டு செந்தில் செய்யும் விஷயங்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றன. பிறகு சில காலங்களுக்குப் பிறகு கவுண்டமணியும் செந்திலும் பிரிந்துவிட்டனர். அப்பொழுதும் கூட செந்தில் ரஜினி மாதிரியான முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டுதான் இருந்தார்.
ஒருமுறை ரஜினி ஒரு பேட்டியில் கூறும்போது கூட வீரா திரைப்படத்தில் செந்தில் நகைச்சுவை காட்சிகளாலேயே பாதி சீன்களில் சிரித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். தற்சமயம் செந்தில் வீடு கட்டி அதில் நல்லபடியாக வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டிற்கு நான்கு வருடத்திற்கு முன்பு சினிமா வாய்ப்பை தேடி வந்த நபர் ஒருவர் வாடகைக்கு சேர்ந்தாராம்.
மேல் மாடியை அவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார் செந்தில். ஆனால் அங்கு குடியேறியவர் அந்த வீடு தன்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு செய்து அந்த வீட்டை ஆக்கிரமிப்பு செய்வதற்கு முயற்சித்து வருகிறார். அவர் குடியேறி நான்காண்டுகளாகியும் வாடகையும் கொடுக்கவில்லை வழக்கும் கோர்ட்டில் நடந்து கொண்டுள்ளது என்று செந்தில் தனது பேட்டியில் மிகவும் கவலையுடன் கூறியுள்ளார்.