Connect with us

பத்திரிக்கையாளரிடம் கடன் வாங்கிய சிவக்குமார்!.. 100 ரூபாய் காசுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா!..

sivakumar1

Cinema History

பத்திரிக்கையாளரிடம் கடன் வாங்கிய சிவக்குமார்!.. 100 ரூபாய் காசுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா!..

cinepettai.com cinepettai.com

Actor sivakumar: 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். ஆரம்பத்தில் துணை கதபாத்திரங்களில் நடித்து வந்த சிவக்குமார் கொஞ்சம் கொஞ்சமாக கதாநயாகனாக நடிக்க துவங்கினார்.

அதன் பிறகு தமிழில் டாப் நடிகர்களில் முக்கியமானவராக சிவக்குமார் இருந்தார். ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வாய்ப்பு தேடி வந்தப்போது பெரும் நட்சத்திரமாக இருந்தார் சிவக்குமார். சிவக்குமார் கதாநாயகனாக நடித்த கவிக்குயில் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.

அந்த அளவிற்கு சிவக்குமார் பெரும் நடிகராக உச்சத்தை அடைந்திருந்தார். ஆனால் மாறி வரும் தலைமுறைகளுக்கேற்ப மாறாமல் ஒரே மாதிரி நடித்து வந்ததால் சீக்கிரமே மார்க்கெட்டை இழந்தார் சிவக்குமார். இருந்தும் எல்லா காலங்களிலும் பலருக்கும் உதவிகளை இவர் செய்துள்ளார்.

இதுக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறும்போது, “நான் சிவக்குமாரை சந்திக்கும்போது நான் அவரை குறித்து எழுதிய கட்டுரைக்காக என்னை பாராட்டினார். மேலும் அவரது வீட்டிற்கு என்னை அழைத்து செல்ல இருந்தார். அப்போது ஒரு வயது முதிர்ந்த நபர் சிவக்குமாருக்கு வணக்கம் சொல்லிக்கொண்டு நின்றார்.

அவர் அப்படி நிற்கும்போதே அவர் உதவி கேட்டுதான் வந்துள்ளார் என்பதை புரிந்துக்கொண்டார் சிவக்குமார். ஆனால் அப்போது அவர் கையில் பணம் எதுவும் இல்லை. எனவே என்னிடம் 100 ரூபாய் கடன் வாங்கி அதை அவருக்கு கொடுத்தார் சிவக்குமார். அதன் பிறகு எனக்கு அந்த காசை திரும்ப கொடுத்துவிட்டார். அந்த அளவிற்கு மற்றவருக்கு நன்மைகள் செய்ய கூடியவர் சிவக்குமார்” என கூறியிருந்தார் பிஸ்மி.

POPULAR POSTS

rajinikanth
samuthrakani pa ranjith
rajinikanth
modi thiagaraja kumararaja
kamalhaasan gautham menon
vk ramasamy mgr
To Top