Cinema History
அந்த படத்தில் நடிக்கிறேன்னு விஜய் என்னை ஏமாத்திட்டாரு!.. வெளிப்படையாக கூறிய சேரன்..
குடும்ப படங்கள் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். தொடர்ந்து குடும்ப பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டுதான் சேரனின் கதைகளங்கள் அமையும். அப்படியான திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியிலும் கூட ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.
சேரன் நடித்து வெளியான தவமாய் தவமிருந்து திரைப்படம் இப்போதும் கூட மக்கள் மத்தியில் விருப்பமான படமாகும். இந்த நிலையில் காதலை மையப்படுத்தி சேரன் ஒரு கதையை எழுதினார். இந்த கதைக்கு ஒரு இளம் ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்.
அந்த சமயத்தில் விஜய் படத்திற்கு கதை கேட்டு வந்ததால் அவரிடம் அந்த படத்தின் கதையை கூறினார் சேரன். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் சேரன் சொன்ன அந்த கதையை பொறுமையாக கேட்டார் விஜய். அவருக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது.
கண்டிப்பாக அந்த படத்தில் நடிக்கிறேன் என கூறினார். ஆனால் அதன் பிறகு தனக்கு தேதி இல்லை என்று அந்த படத்தை புறக்கணித்தார் விஜய். பிறகு சேரனே கதாநாயகனாக நடித்து ஆட்டோக்கிராப் என்கிற பெயரில் அந்த படம் வெளியானது. அதற்கு வெகுவான வரவேற்பு இருந்தது. கிட்டத்தட்ட 100 நாளை தாண்டி அந்த படம் ஓடியது.
ஒருவேளை அதில் விஜய் நடித்திருந்தால் இன்னமும் ஹிட் அடித்திருக்க வேண்டிய படம் அது. இந்த விஷயத்தை சேரன் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.