Connect with us

புடவைதான் எனக்கு பாதுக்காப்பான ஆடை!.. சாய் பல்லவி இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு!..

sai pallavi 1

Latest News

புடவைதான் எனக்கு பாதுக்காப்பான ஆடை!.. சாய் பல்லவி இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு!..

cinepettai.com cinepettai.com

Premam Actress Sai pallavi : ப்ரேமம் திரைப்படம் கதாநாயகன் நிவின் பாலிக்கு (nivin paul) எப்படியான படமாக இருந்தது என தெரியவில்லை. ஆனால் அந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளுக்குமே அந்த திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதில் நடித்த அனுப்பாமா பரமேஸ்வரன் (Anupama parameshwaran), மடோனா சபாஸ்டியன் (Madona Sabastian), சாய் பல்லவி (sai pallavi) மூவருமே அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் வாய்ப்பை பெற துவங்கினார்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் அந்த படம் மூலமாக சாய் பல்லவிக்கு மலையாள சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழ் நாட்டு ரசிகர்களே மலர் டீச்சர்  என்று சுற்றி கொண்டிருந்ததை பார்த்திருக்க முடியும். இந்த நிலையில் அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றார் சாய் பல்லவி.

பொதுவாக தெலுங்கிற்கு சென்றாலே கதாநாயகிகளை வைத்து கவர்ச்சி காட்சிகளை எடுத்துவிடுவார்கள், சமந்தா, தமன்னா மாதிரியான நடிகைகள் தெலுங்கு சென்றதும் அதிகமாக கவர்ச்சி காட்டியதை பார்க்க முடியும். ஆனால் சாய் பல்லவி தெலுங்கு சினிமாவிற்கு சென்ற போதும் கூட மிகவும் நாகரிகமாகவே நடித்து வந்தார்.

தற்சமயம் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது எதற்காக அனைத்து பேட்டிகளுக்கும், விழாக்களுக்கும் புடவை கட்டி வருகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, புடவைதான் எனக்கு பாதுக்காப்பான உடையாக உள்ளது. ஒரு விழாவிற்கு பேச வந்திருக்கும்போது கவர்ச்சியாக உடை அணிந்தால் அது எங்கு விலகும் என்ற பயத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் புடவையில் அந்த பயம் இல்லை. அதற்காக புடவைதான் நல்ல உடை என நான் கூறவில்லை. எனக்கு அந்த உடை சரியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் சாய் பல்லவி. அவரின் இந்த பேச்சுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டாகியுள்ளது.

POPULAR POSTS

rajinikanth
samuthrakani pa ranjith
rajinikanth
modi thiagaraja kumararaja
kamalhaasan gautham menon
vk ramasamy mgr
To Top