Cinema History
விட்டா குழந்தையை கூட கதாநாயகியா நடிக்க வைப்பாங்க!.. 13 வயதிலேயே கதாநாயகி ஆகிய நடிகை… யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இப்போதுதான் 18 வயதுக்கு மேல் ஆனவர்களை கதாநாயகியாக நடிக்க வைக்கின்றனர். ஆனால் முந்தைய தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வயது பெண்களை கூட கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கின்றனர்.
இப்போதைய சட்டத்தின்படி பெரும் குற்றம் என்றாலும் கூட அப்போதைய தலைமுறை அந்த குழந்தைகளை கூட கதாநாயகியாக ரசித்து பார்த்து இருக்கின்றனர் என்பது சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது.
உதாரணமாக நடிகை ஜெயலலிதா தன்னுடைய 15 வது வயதிலேயே வெண்ணிற ஆடை திரைப்படத்தில் கவர்ச்சி பாடலில் நடனமாடி இருக்கிறார் அதேபோல நடிகை மீனா, நடிகை ரேவதி போன்றவர்கள் தங்களுடைய 16 வது வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்கள்.
இவர்களை எல்லாம் தாண்டி 13 வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆன நடிகையும் உண்டு. அது வேறு யாருமில்லை நடிகை ஊர்வசிதான் நடிகை ஊர்வசிக்கு தமிழில் முதன்முதலாக கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்த திரைப்படம் முந்தானை முடிச்சு.
பள்ளி பருவத்திலேயே நடிப்பு:
இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது எட்டாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தாராம் நடிகை ஊர்வசி. இந்த நிலையில் அவரை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார் பாக்யராஜ்.
இத்தனைக்கும் அந்த கதாபாத்திரத்தின் முதிர்ச்சி என்பது அதிகமாக இருக்கும். இருந்தாலும் அதை சிறப்பாக நடித்திருப்பார் ஊர்வசி. காலையில் 7 முதல் மதியம் ஒரு மணி வரை அவருக்கு பள்ளிக்கூடம் இருக்குமாம். இரவு 8:00 மணிக்கு எல்லாம் தூங்க சென்று விடுவாராம்.
இந்த நிலையில் 8:00 மணிக்குதான் மறுநாள் படபிடிப்பிற்கான கதையை பாக்கியராஜ் கூறுவாராம். அதை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஊர்வசி உறங்கி விடுவாராம். இப்படித்தான் அந்த திரைப்படத்தில் நான் நடித்தேன் இந்த படத்தின் கதை கூட முழுதாக அந்த படத்தில் நடிக்கும் போது தெரியாது என்று கூறியிருக்கிறார் ஊர்வசி.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் 13 வயதிலேயே ஊர்வசிக்கு அந்த திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலும் வைக்கப்பட்டிருந்ததுதான்.