Connect with us

லவ் ப்ரோப்போஸ் பண்றதுக்காக அஜித் பாடிய பாடல்… புது விதமா காதலை சொல்லி இருக்காரே மனுஷன்!..

shalini ajith

Cinema History

லவ் ப்ரோப்போஸ் பண்றதுக்காக அஜித் பாடிய பாடல்… புது விதமா காதலை சொல்லி இருக்காரே மனுஷன்!..

cinepettai.com cinepettai.com

Ajith shalini love story: சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் கதாநாயகிகளுடன் சேர்ந்து நடித்தாலும் கூட நமது ஹீரோக்கள் பெரும்பாலும் சினிமாவில் இல்லாத பெண்ணைதான் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அதில் குறைந்தபட்சமாக சில நடிகர்கள் மட்டும் சினிமாவிற்குள்லேயே கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்கின்றனர். அப்படி தமிழில் காதலித்து திருமணம் செய்த பிரபலமான ஜோடிகளில் முக்கியமானவர்கள் அஜித்தும் ஷாலினியும் ஆவர்.

அமர்க்களம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் உண்டானது. ஷாலினி ஏற்கனவே அஜித்தின் பெரும் ரசிகை என்பதால் படப்பிடிப்பு நடக்கும் பொழுதே அவருக்கு அஜித்தின் மீது காதல் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அஜித்திற்கு இந்த விஷயம் மிக தாமதமாகத்தான் தெரிந்தது. இந்த நிலையில் ஷாலினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தனது காதலை சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறார் அஜித்.

இதற்காக அவர் அமர்க்களம் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலையே பாடியுள்ளார். அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினி பாடுவதாக வரும் உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சம் கேட்கின்றதே என்கிற அந்த பாடலை அஜித்தே பாடி ஒரு கேசட்டில் பதிவு செய்து அந்த கேசட்டை காதல் கடிதம் போல ஷாலினிடம் கொடுத்துள்ளார்.

அதை கேட்ட உடனேயே ஷாலினிக்கு தெரிந்து விட்டது. தன் காதலிப்பதை தெரிவிக்கத்தான் இந்த பாடலை பாடி பிடித்துள்ளார் அஜித் என்று, இந்த விஷயத்தை அந்த படத்தின் இசையமைப்பாளரான பரத்வாஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

POPULAR POSTS

kota srinivasa rao
santhanam sundar c
manikandan kavin
karathe raja prakash raj
To Top