Connect with us

செங்கல் சூளையில் வேலைக்கு அனுப்பிட்டார்!.. இயக்குனரிடம் வசமாக சிக்கிய ஜெய் பீம் நடிகர்!..

manikandan jaibhim

Latest News

செங்கல் சூளையில் வேலைக்கு அனுப்பிட்டார்!.. இயக்குனரிடம் வசமாக சிக்கிய ஜெய் பீம் நடிகர்!..

cinepettai.com cinepettai.com

jai bhim actor manikandan: திரைப்படங்களை வெறும் கடமைக்காக எடுக்காமல் அதில் பல நுட்பங்களை கையாளக்கூடிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உண்டு. சிலர் மிகவும் ஆராய்ச்சி செய்து பாடுபட்டு நிறைய வேலைகள் பார்த்து ஒரு படத்தை எடுப்பார்கள்.

அப்படி எல்லாம் எந்த ஒரு கடுமையான வேலையும் பார்க்காமல் சும்மா சில கதைகளை காப்பி அடித்து படம் எடுப்பவர்களும் சினிமாவில் உண்டு. அப்படியே சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஞானவேல்.

ஜெய் பீம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஞானவேல் அடுத்தது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து தற்சமயம் படம் இயக்கி வருகிறார். போலீஸ்களின் போலி என்கவுண்டர்களை மைய கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் கிட்டத்தட்ட 90 நாட்கள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஜெய் பீம் திரைப்படம் 45 நாட்கள்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பு படத்தில் பணி புரிந்த மணிகண்டன் மற்றும் கதாநாயகி லிஜோமல் ஜோஸ் இருவரையுமே அந்த பழங்குடியின சமூகத்திடம் ஒரு மாதம் வேலை பார்க்க விட்டிருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.

ஏனெனில் அப்பொழுதுதான் அந்த சமூகத்தை குறித்து இவர்களால் தெரிந்து கொள்ள முடியும் தத்துரூபாவாக அவர்கள் போலவே இவர்களால் நடிக்க முடியும் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர்.

இதனால் செங்கல் சூளையில் எல்லாம் மணிகண்டன் வேலை பார்த்து இருக்கிறார் இந்த படப்பிடிப்பின் வீடியோக்கள் தற்சமயம் வெளியாகி உள்ள நிலையில் அவை ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

POPULAR POSTS

ajith fans
gv prakash
vijayakanth 2
radharavi mr radha
sundar c shankar
ajith fan
To Top