அந்த விஷயத்தை கவுண்டமணியை பார்த்துதான் காபி அடித்தார் அஜித்!.. ஆனால் அஜித்துக்கு இது செட் ஆகாது!..
Gaundamani and Ajith : தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு பெரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அஜித் எதேர்ச்சையாகதான் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார்.
ஆனால் தமிழ் சினிமா அவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுக்கும் என்பது அஜித்தே எதிர்பார்க்காத ஒன்று. ஏனெனில் முதல் படம் நடித்து முடித்துவிட்டு மீண்டும் கார்மெண்ட்ஸ் ஒன்றை துவங்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் ஆசையாக இருந்தது.
அதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் தற்சமயம் விஜய்க்கு அடுத்து அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஒரு நடிகராக அஜித்குமார் இருக்கிறார். பொதுவாக அஜித் இசை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா பத்திரிகையாளர் பேட்டி என்று எதற்குமே வர மாட்டார் இது அனைவரும் அறிந்தது தான்.

இருந்தாலும் கூட அவருக்கான ரசிகர்கள் குறையவே இல்லை. ஆனால் இதை இதற்கு முன்பே செய்தவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டமணி தமிழ் சினிமாவில் பிரபலமாக துவங்கிய பொழுது அவரை பேட்டி எடுக்க நிறைய பத்திரிகைகள் முயற்சி செய்தன. அப்பொழுதெல்லாம் பத்திரிகைகள் நடிகர்களை பேட்டி எடுத்து அதை அவர்களது இதழில் வெளியிடுவார்கள்.
ஆனால் கவுண்டமணி எப்போதுமே இந்த மாதிரியான பேட்டிகளுக்கு ஒப்பு கொண்டதே கிடையாது. பத்திரிகையாளர் சந்திப்பு விருது வழங்கும் விழா போன்றவற்றிற்கு கவுண்டமணியும் வர மாட்டார். அவரை பார்த்துதான் அந்த பார்முலாவை அஜித் பின்பற்றுகிறாரா என்றும் பேச்சுக்கள் உண்டு இருந்தாலும் கவுண்டமணியாக இருந்தாலும் சரி அஜித்தாக இருந்தாலும் சரி அவர்கள் பொதுவெளிக்கு வராத காரணத்தினால் அவர்களுக்கான ரசிகர்கள் குறைந்தார்களா என்றால் அது மட்டும் இல்லை ரசிகர்கள் அதிகரித்து கொண்டு தான் இருந்தார்கள்.