Connect with us

நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே… நரி வேலை பார்த்த புல்லி கேங்கிற்கு அர்ச்சனா கொடுத்த பதிலடி!.

archana poornima

Bigg Boss Tamil

நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே… நரி வேலை பார்த்த புல்லி கேங்கிற்கு அர்ச்சனா கொடுத்த பதிலடி!.

Social Media Bar

போன வாரம் மாயா கேப்டன் ஆனதில் இருந்து பிக்பாஸ் தொடர் மிக சுறு சுறுப்பாக சென்று கொண்டுள்ளது. போன வாரம் மாயா, பூர்ணிமா, ஐஸ்வர்யா, ஜோவிகா கொண்ட நால்வர் குழு ஒன்று சேர்ந்து விசித்ராவையும், அர்ச்சனாவையும் டார்கெட் செய்து அடித்து வந்தனர்.

இதனால் பொது மக்கள் மத்தியில் மாயா குழுவின் மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்தனர். மேலும் இந்த குழுவிற்கு புல்லி கேங் என பெயர் வைத்தனர். இதனை தொடர்ந்து அர்ச்சனாவிற்கும் விசித்ராவிற்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டானது.

போன வாரம் கமல்ஹாசன் இவர்கள் அனைவரையும் சந்தித்தப்போது விசித்ரா, அர்ச்சனா மற்றும் தினேஷிற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை இந்த புல்லி கேங் அறிந்து கொண்டது. எனவே விசித்ராவை டார்கெட் செய்வதற்கு முதலில் கூட்டத்தை கலைக்க தீர்மானித்தனர் என கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்றைய டாஸ்க்கில் நமக்கு பிடித்தவர்களுக்கு லட்டு கொடுக்கலாம் என்கிற டாஸ்க் வைத்தப்போது பூர்ணிமா அந்த லட்டை அர்ச்சனாவிற்கு கொடுத்தார். இந்த வாரம் அர்ச்சனாவுடன் நட்பாக ஆசைப்படுகிறேன் என கூறினார்.

அதை கேட்ட உடனேயே இது எல்லாம் விச்சும்மாவை பழி வாங்கதானே என்று கமெண்ட் செய்தார் கூல் சுரேஷ். ஆனால் அர்ச்சனா கைக்கு லட்டு வந்தப்போது அவர் விசித்ராவிற்கே அதை கொடுத்து புல்லி கேங்கின் ப்ளானை காலி செய்துவிட்டார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top