Bigg Boss Tamil
அந்த நாய் கூட போய் ப#த்துட்டு வந்தியா? அர்னவிற்கும் மனைவிக்கும் இடையே வந்த சண்டை.. வெளிப்படையாக கூறிய அர்னவ்.
சீரியல்களில் நடித்து பலர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதை பார்க்க முடியும். அப்படியாக சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்னவ்.
சன் டிவியில் ஒளிப்பரப்பான சக்தி என்கிற சீரியல் மூலமாக 2014 ஆம் ஆண்டு இவர் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய சீரியல்களில் இவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்து வந்தன.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான செல்லம்மா சீரியல் இவருக்கு முக்கியமான சீரியலாக இருந்தது. அந்த சீரியலில் நடித்ததன் மூலமாக இன்னமுமே அதிகமாக பிரபலமடைந்தார் அர்னவ்.
இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில்தான் இவரது சொந்த வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியானது. இவர் பெண்களுடன் தவறான உறவில் இருப்பதாகவும் மேலும் அவரது மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் அவரது மனைவி குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் மற்ற பெண்களுடன் போனில் பேசிய ஆடியோவையும் லீக் செய்தனர். இதனால் மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்ற ஆர்னவ் சென்ற இரண்டு வாரங்களிலேயே வெளியே வந்துவிட்டார்.
இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறும்போது தன்னுடைய மனைவிதான் தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார். ஒரு நாள் நண்பன் வீட்டில் தங்கிவிட்டு வந்தேன். அப்போது என்னை அந்த நாயோட படுத்துட்டு வர்றீயா என கேட்டார். என்று அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார் அர்னவ்.
