Latest News
சாதியையே நோண்டிகிட்டு இல்லாமல் கொஞ்சம் ஜாலியாவும் படம் பண்ணலாமே!.. ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்த அசோக் செல்வன்!..
Actor Ashok Selvan: தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் தற்சமயம் முக்கியமானவராக நடிகர் அசோக் செல்வன் இருந்து வருகிறார். அசோக் செல்வன் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.
ஏனெனில் ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிய கதைகளை தேர்ந்தெடுத்து புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அசோக் செல்வன். சமீபத்தில் அவர் நடித்த மன்மத லீலை, சபாநாயகன் போன்ற திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அசோக் செல்வனுக்கான மார்க்கெட்டில் அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என கூறலாம்.
ஏனெனில் தற்சமயம் வெளியான ப்ளூ ஸ்டார் என்கிற திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்ததோடு நல்ல விமர்சனத்தையும் அந்த திரைப்படம் பெற்றிருக்கிறது. பொதுவாக பா ரஞ்சித் திரைப்படம் என்றாலே சாதிய ரீதியான பிரச்சனைகளை பேசும் திரைப்படங்களாகதான் இருக்கும் இந்த நிலையில் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் எஸ் ஜெயக்குமாரின் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் உருவாகி இருப்பதால் இந்த திரைப்படமும் சாதி அரசியலை பேசும் திரைப்படமாகவே இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் நடிகர் சாந்தனு மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர். இந்த படம் வெளியான பொழுதே நல்ல வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்தது. இருந்தாலும் பா.ரஞ்சித்திற்கு எதிராக விமர்சனம் செய்யக்கூடிய ஒரு சாராரும் இருக்கின்றனர்.
அவர்கள் பேசும் பொழுது தொடர்ந்து பா.ரஞ்சித் சாதிய ரீதியான படங்களை எடுத்து அவர்தான் சாதிய வன்மங்களை மீண்டும் மீண்டும் வளர்த்து வருகிறார் என்று குற்றம்சாட்டியும் வருகின்றனர் இந்த நிலையில் அசோக் செல்வன் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஒரு ட்வீட் ஒன்றை எக்ஸ் தளத்தில் போட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த ரசிகர் ஒருவர் கூறும் பொழுது ஜாதியை விட்டு கொஞ்சம் வெளியே வந்து தொலைங்கப்பா அது தானா மாறுது சும்மா அதையே நோண்டிக்கிட்டு இருக்காதீங்க. ஒ மை கடவுளே மாதிரியான திரைப்படங்களை எடுங்க என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த அசோக் செல்வன் ஓ மை கடவுளே திரைப்படம் உங்களுக்கு மிகவும் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் இந்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை பற்றி முடிவு செய்வதற்கு முன்பு அதை ஒரு தடவை பார்க்கவும் உலகம் முழுவதும் ஒற்றுமையும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதே படத்தின் கருத்தாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் அசோக் செல்வன்.