Bigg Boss Tamil
மாயாவை கேப்டன் ஆக்குனதே பெரும் சம்பவம்தான்!.. சிக்கி தவிக்கும் போட்டியாளர்கள்!..
தமிழில் ஆரம்பித்த முதல் வாரம் முதல் இப்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. துவங்கிய பொழுது இதற்கு குறைவான பார்வையாளர்களே இருந்தாலும் போகப்போக இதை பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளனர்.
ஒருவர் எலிமினேஷன் ஆகி வரும் நிலையில் போனவாரம் புதிதாக ஐந்து நபர்களை பிக் பாஸ் வீட்டில் சேர்த்தனர். இந்த நிலையில் தற்சமயம் அதில் இருந்து பிரதீப்பும் வெளியேறியுள்ளார். பிரதீப்பிற்கும் மாயாவிற்கும் இடையே நிறைய பிரச்சனைகள் இருந்தது.
இடையிலேயே பிரதிப்பால் தான் நான் பாதுகாப்பாற்றதாக உணர்கிறேன் என்று மாயா கூறி வந்தார். இந்நிலையில் எலிமினேஷனில் பிரதீப் சென்றது மாயாவிற்கு மகிழ்ச்சியான ஒரு விஷயமாக அமைந்துள்ளது. மேலும் மாயாதான் இந்த வாரத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறார் மாயா. அவர்கள் பல் துலக்கும் பிரஸ் போன்றவற்றை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு கையால் பல் துலக்குங்கள் என்றெல்லாம் அவர்களிடம் நிர்ப்பந்திக்கிறார்.
பொதுவாக தலைவர்களுக்கு இந்த மாதிரி தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. இதனால் மாயாவிற்கு கமல்ஹாசன் ஏதேனும் தண்டனைகள் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.