Connect with us

அடிச்சே அவன் முதுகு தோள் கிழிஞ்சுட்டு!.. படப்பிடிப்பில் வெற்றிமாறன் செய்த சம்பவம்!. அடுத்த பாலாவா இருப்பார் போல.

vetrimaaran

Tamil Cinema News

அடிச்சே அவன் முதுகு தோள் கிழிஞ்சுட்டு!.. படப்பிடிப்பில் வெற்றிமாறன் செய்த சம்பவம்!. அடுத்த பாலாவா இருப்பார் போல.

Social Media Bar

சினிமாவைப் பொறுத்தவரை சில நடிகர்கள் ஏதோ நடித்தால் போதும் என்று சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிலர் உயிரைக் கொடுத்து நடிப்பார்கள். உதாரணத்திற்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச்சான் ஒவ்வொரு திரைப்படத்திலும் எந்த டூப்பும் போடாமல் அவரே அனைத்து சண்டை காட்சிகளும் நடிப்பார்

இதனால் அவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் ரசிகர்களுக்காக அப்படி ஒரு விஷயத்தை செய்வார். அதேபோல தமிழ் சினிமாக்களும் மக்களுக்காக பாடுபட்டு நடிக்கும் நடிகர்கள் பலர் இருக்கின்றனர்.

அதில் அட்டகத்தி தினேஷ் முக்கியமானவர். அவரை நடிக்க வைப்பது குறித்து பெரிதும் யோசித்து இருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் தினேஷ் நடிக்க துவங்கிய பிறகு அட்டக்கத்தி தினேஷ் தவிர அந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்கிற அளவிற்கு அவர் சிறப்பாக நடித்துள்ளார்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு காட்சியில் வாழை மட்டையை வைத்து அட்டகத்தி தினேஷை போலீஸ் அடிப்பது போன்ற காட்சி வரும் அந்த காட்சிக்கு நிஜமாகவே வாழை மட்டையை வைத்து அடிக்க வைத்துள்ளார் வெற்றிமாறன்.

ஏனெனில் அப்போதுதான் பார்ப்பதற்கு அந்த காட்சி நிஜமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அப்படி அடிக்கும் பொழுது நிஜமாகவே அட்டகத்தி தினேஷிற்கு முதுகு தோல் உரிந்து விட்டது. அதனைப் பார்த்து படக்குழுவே அதிர்ச்சியில் இருக்கும் பொழுது சிறிது நேரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பில் நடிப்பதற்காக சகஜமாக நின்றுள்ளார் அட்டகத்தி தினேஷ்.

அப்பொழுது இவ்வளவு கஷ்டங்களை ஏன் தாங்கிக் கொள்கிறீர்கள் என வெற்றிமாறன் கேட்கும் பொழுது இது ஒரு நிஜக் கதை சார் இதில் 20 சதவீதத்தை தான் நாம் படமாக்குகிறோம். நமக்கே இப்படி என்றால் உண்மையாக இந்த அடிகளை வாங்கியவர்களுக்கு எப்படி இருக்கும் அதோடு ஒப்பிடும் பொழுது நான் வாங்குவது ஒன்றும் பெரிய ஆடி இல்லை என்று கூறியுள்ளார் அட்டகத்தி தினேஷ். இந்த விஷயத்தை வெற்றிமாறன் பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

To Top