Cinema History
அந்த பொண்ணு ஒழுங்கா நடிக்காது சார்!.. குறை சொன்ன ரஜினியை மிரள வைத்த ஜோதிகா!..
ரஜினி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலுமே அந்த படத்தின் கதை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால்தான் அதில் நடிப்பார். அப்படித்தான் சந்திரமுகியில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். இத்தனைக்கும் சந்திரமுகியில் பல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.
பிரபு ஜோதிகா இவர்களுக்கு நடுவே ரஜினிக்கும் ஒரு கதாபாத்திரம் என்றுதான் இருக்குமே தவிர ரஜினி மட்டுமே முக்கிய கதாபாத்திரம் என்று படக்கதை செல்லாது. இருந்தும் கூட அந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார்.
ஆனால் அந்த படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதில் ரஜினிக்கு விருப்பமே இல்லையாம். ஏனெனில் ஜோதிகா அதற்கு முன்பு அவ்வளவு சீரியசான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது. எனவே சந்திரமுகிதான் மொத்த படத்தின் முக்கிய கதாபாத்திரமே, அதற்கு நன்றாக நடிக்கும் ஒரு பெண்ணை நடிக்க வைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் முடிவாக இருந்தார்.
இதற்காக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாம் என்பது ரஜினிகாந்தின் எண்ணமாக இருந்தது. அப்போது பி.வாசு கூறும்போது இல்லை ஜோதிகா இதற்கு சரியாக இருப்பார். வேண்டுமென்றால் அவரை வைத்து சில காட்சிகளை முன்னோட்டமாக எடுத்துப் பார்ப்போம்.
அது சரியாக இருந்தால் படத்திற்கு கொண்டு போகலாம் என்று கூறினார் வாலி அதன்படி சலங்கை காட்சி ஒன்றில் ஜோதிகா ரஜினியை முறைத்து பார்க்கும் காட்சி வரும். அதை படமாக்கினர் அப்பொழுது ஜோதிகா ரஜினியை பார்த்த பார்வையை பார்த்து ரஜினிக்கு உடல் சிலிர்த்து விட்டது உடனே அவர் பி வாசுவை அழைத்து ஜோதிகா மட்டும் சந்திரமுகியாக நடித்தால் இந்த படம் ஹிட்டு என்று கூறியுள்ளார் அதன்படியே சந்திரமுகி பெரும் வெற்றியை கொடுத்தது.