Latest News
விஜய்யுடன் இரவில் ஒரே அறையில் இருந்த கீர்த்தி சுரேஷ்!.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!..
Actor Vijay : நடிகர் விஜய் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாகவே தொடர்ந்து அவரது சம்பளம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் முன்னணி நடிகர்கள் எல்லாம் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கிய பின் அது தமிழ் சினிமாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கிசுகிசு பேசுவதில் பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். எல்லா காலங்களில் தமிழ் சினிமாவில் இருந்து கிசு கிசுவை வெளியிடுவதற்கு ஒரு ஆள் இருந்துக்கொண்டே இருக்கும். ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷிற்கும் நடிகர் விஜய்க்கும் இடையே காதல் இருந்து வருவதாக ஒரு பேச்சு இருந்தது.
பிறகு கீர்த்தி சுரேஷ் குடும்பத்தாரே அது பொய் என பதிலளித்திருந்தனர். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் தற்சமயம் கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் பாண்டிச்சேரி சென்றுள்ளார்.
அதே சமயம் நடிகை கீர்த்தி சுரேஷும் அவர் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பாண்டிச்சேரிக்கு வந்துள்ளார். இதனால் இருவருமே பாண்டிச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
இந்த சமயத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் தனது அறைக்கு வெளியே வந்த கீர்த்தி சுரேஷ் விஜய் அறைக்கு சென்றதாகவும், பிறகு 2 மணி நேரம் இருவரும் ஒரே அறையில் இருந்துள்ளனர் என கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன். இந்த செய்தி அங்கு பணிப்புரிபவர்கள் மூலமாக தெரிந்ததாக அவர் கூறுகிறார்.
Source: Link