Connect with us

தியாகராஜ பாகவதர் ஜெயிலுக்கு போனதால் வாய்ப்பை பெற்ற நடிகை.. இப்படியும் நடந்துச்சா!..

saroja devi honnappa bagavathar

Cinema History

தியாகராஜ பாகவதர் ஜெயிலுக்கு போனதால் வாய்ப்பை பெற்ற நடிகை.. இப்படியும் நடந்துச்சா!..

Social Media Bar

Thiyagaraja baghavathar: எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் தியாகராஜ பாகவதர் முக்கியமானவர் ஆவார். தியாகராஜ பாகவதரின் படங்கள் மற்றும் பாடல்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது.

முக்கியமாக அவரது படத்தில் வரும் பாடலான செந்தமிழ் தேன்மொழியால் என்கிற அந்த பாடல் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு பாடலாகும். அந்த காலகட்டங்களில் வந்த வேறு எந்த பாடலும் அந்த அளவிற்கு இப்போதைய தலைமுறையை எட்டவில்லை என்று கூறலாம்.

அப்படிப்பட்ட தியாகராஜ பாகவதர் ஒரு பத்திரிகையாளரின் மரணம் காரணமாக சிறைக்கு சென்ற சம்பவம் நடந்தது. என்.எஸ். கிருஷ்ணன் குறித்தும் தியாகராஜ பாகவதர் குறித்தும் விமர்சனங்களை எழுதி வந்த ஒரு பத்திரிக்கையாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதை அடுத்து அதற்கு இவர்கள் தான் காரணம் என்று கூறி அவர்களை சிறையில் வைத்திருந்தனர்.

இந்த காலகட்டத்தில் தான் ஹொன்னப்பா பாகவதர் என்கிற நடிகர் பிரபலமாக துவங்கியிருந்தார். இவர் கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக இருந்தார். தியாகராஜ பாகவதர் இல்லாத காலகட்டத்தில் தமிழ் சினிமாவிலும் நடித்து வந்தார்.

அப்பொழுது பாடகிக்கான நேர்காணல் நடந்து கொண்டிருந்த பொழுது அதில் நடிகை சரோஜா தேவியும் கலந்து கொண்டிருந்தார். அவரை பாடச் சொன்ன பொழுது அவர் நன்றாகவே பாடினார். இருந்தாலும் அவரது முகம் ஒரு கதாநாயகிக்கான முகமாக ஹொன்னப்பா பாகவதருக்கு தெரிந்தது உடனே அவர் சரோஜாதேவிக்கு மேக்கப் போட்டு அவரை நடிக்கச் சொன்னார்.

சரோஜாதேவி மிக சிறப்பாகவே நடித்தார். அதனை பார்த்து தனது திரைப்படத்திலேயே ஹொன்னப்பா பாகவதர் ஒரு வாய்ப்பை சரோஜாதேவிக்கு கொடுத்தார். அதுதான் சரோஜாதேவியின் முதல் படம் மறைமுகமாக பார்க்கும் பொழுது ஹொன்னப்பா பாகவதர் சினிமாவிற்கு வந்ததால் தான் சரோஜாதேவிக்கு வாய்ப்பு கிடைத்தது ஒருவேளை தியாகராஜ பாகவதர் சிறைக்கு செல்லாமல் இருந்திருந்தால் ஹொன்னப்பா பாகவதர் தமிழ்நாட்டிற்கு வந்து அவரது படத்திற்கான நேர்காணலை நடத்தி இருக்க மாட்டார் சரோஜாதேவிக்கும் அதில் வாய்ப்பு கிடைத்திருக்காது என்று கூறப்படுகிறது .

Articles

parle g
madampatty rangaraj
To Top