Bigg Boss Tamil
டைட்டிலுக்காக சண்டை செய்யுங்க விசித்ரா!.. தூண்டிவிட்ட பிக்பாஸ்!.. டைட்டில் வின்னர் விக்ரமிற்கே போட்டியா!..
Bigg boss tamil vichitra : ஆரம்பத்தில் மெதுவாக துவங்கினாலும் போக போக சூடு பறக்க சென்று கொண்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதிலும் வைல்ட் கார்டு மூலமாக 5 புது போட்டியாளர்கள் வந்தப்பின் இன்னும் சண்டை சச்சரவுகள் அதிகமாகிவிட்டன.
தற்சமயம் வைல்ட் கார்டில் வந்த போட்டியாளர்களில் அர்ச்சனாவிற்கும், தினேஷிற்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விசித்திரா முதலில் பிக்பாஸ் வீட்டில் ராசியாக இருந்தாலும் கூட மாயா கேப்டன் ஆன பிறகு விசித்திரா அர்ச்சனா பக்கம் சாய்ந்துவிட்டார்.
அர்ச்சனாவிற்கு பாதுக்காப்பு அளித்ததற்காக வெகுவாக பாராட்டப்பட்டார். இந்த நிலையில் விசித்திரா வந்தப்போது அனைவரையும் தனது மகன் மகள் போல பார்க்கிறேன் என கூறியிருந்தார். அது முழுவதும் பொய் என மாயாவின் புல்லி கேங் பேசியதில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் விசித்திரா.
இந்த நிலையில் பிக்பாஸிடம் சென்ற விசித்திரா, ஒரு தாயின் அன்பை பொய் என அவர்கள் அழைப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. நான் இந்த டைட்டில் ஜெயிப்பதற்காக எல்லாம் பிக்பாஸிற்கு வரவில்லை என கூறினார்.
அதற்கு பதிலளித்த பிக்பாஸ் “விசித்திரா நீங்கள் ஏற்கனவே பிக்பாஸில் பாதி கிணறை தாண்டி விட்டீர்கள். நல்ல விதமாக விளையாடி வருகிறீர்கள் எனவே உங்கள் பலம் என்னவென்று அறிந்து அவர்களுடன் போட்டியிடுங்கள். டைட்டிலுக்காக விளையாடுங்கள்” என அறிவுரை கூறினார்.
ஏற்கனவே நான்தான் டைட்டில் வின்னர் என விக்ரம் கூறியதில் இருந்து அவரை கலாய்த்து வரும் நெட்டிசன்கள், விக்ரம் டைட்டில் வின்னராக இருக்கும்போது பிக்பாஸ் எதற்கு விசித்திராவை தூண்டி விடுகிறார் என்று காமெடி செய்து வருகின்றனர்.