Connect with us

லூசாடா நீ அவ்வளவு சம்பளத்தை விட்டுட்டு எங்கிட்ட 100 ரூபாய் கேக்குற!.. சம்பள விஷயத்தில் சந்திரபாபு ரூல்ஸால் குழம்பி போன படக்குழு!..

chandrababu 2

Cinema History

லூசாடா நீ அவ்வளவு சம்பளத்தை விட்டுட்டு எங்கிட்ட 100 ரூபாய் கேக்குற!.. சம்பள விஷயத்தில் சந்திரபாபு ரூல்ஸால் குழம்பி போன படக்குழு!..

cinepettai.com cinepettai.com

Chandrababu : தமிழ் சினிமாவில் பழைய காமெடி நடிகர்களில் நாகேஷிற்கு பிறகு அதிகமாக மக்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகர் சந்திரபாபு. நாகேஷிற்கும் சந்திர பாபுவிற்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு.

இருவருமே தங்களது உடல் மொழியின் மூலமாக மக்கள் மத்தியில் காமெடி செய்பவர்கள். அந்த மாதிரியான காமெடிகளை அவர்களால் மட்டுமே செய்ய முடியும் என இருக்கும். இதனால்தான் இவர்கள் இருவருக்குமே எப்போதும் பெரிய நடிகர்கள் படங்களிலேயே வாய்ப்பு கிடைத்தது.

காமெடி நடிகராக மட்டுமில்லாமல் மேலும் பல விஷயங்களை செய்திருக்கிறார் நடிகர் சந்திரபாபு. முக்கியமாக அவள் திரைப்படங்கள் இயக்கியும் இருக்கிறார். சினிமாவிற்கு வந்த பொழுது வெறும் நடிகராக மட்டும் தான் சந்திரபாபு வந்தார்.

ஆனால் போக போக அவருக்கு அதில் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. சந்திரபாபு தன்னுடைய தகுதியை எப்பொழுதும் சம்பளத்தை வைத்துதான் முடிவு செய்வார். எனவே அவர் பிரபலமாகிவிட்ட பிறகு சம்பள விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார்.

சந்திரபாபு கேட்ட நூறு ரூபாய்:

இந்த நிலையில் ஒருமுறை அவருடைய நண்பர் ஒருவரை சந்தித்து கையில் காசே இல்லை ஒரு நூறு ரூபாய் இருந்தால் கொடு என்று கேட்டிருக்கிறார். அவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சந்திரபாபு கொஞ்சம் அதிகமாக செலவு செய்யக் கூடியவர்.

இந்த நிலையில் அவருக்குப் பின்னால் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார் அவர் யார் என்று விசாரித்த பொழுது அவர் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்காக சந்திரபாபுவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பத்தாயிரம் ரூபாய் சம்பளமாக தருவதற்கு தயாராக இருப்பதாகவும் சந்திரபாபு கூறினார்.

பத்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் வர இருக்கும் பொழுது எதற்கு என்னிடம் வந்து 100 ரூபாய் கடன் கேட்கிறாய் என சந்திரபாபுவிடம் கேட்கும் பொழுது நான் இப்பொழுது அதிக சம்பளம் வாங்கி வருகிறேன் பத்தாயிரம் சம்பளத்திற்காக என்னால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் சந்திரபாபு.

அதாவது கையில் நூறு ரூபாய் காசு இல்லாத போது கூட தன்னுடைய தரத்திற்கு ஏற்ற சம்பளம் வந்தால் மட்டும் தான் படத்தில் நடிப்பேன் என்று விடாப்பிடியாக இருந்திருக்கிறார் சந்திரபாபு.

POPULAR POSTS

rajinikanth
samuthrakani pa ranjith
rajinikanth
modi thiagaraja kumararaja
kamalhaasan gautham menon
vk ramasamy mgr
To Top