Connect with us

இயக்குனர் சேரனுக்கு எதிராக சரண்யா பொன்வண்ணன் புகார்!… என்ன ஆச்சு இவருக்கு?…

Cinema History

இயக்குனர் சேரனுக்கு எதிராக சரண்யா பொன்வண்ணன் புகார்!… என்ன ஆச்சு இவருக்கு?…

cinepettai.com cinepettai.com

Saranya and Cheran:தவமாய் தவமிருந்து திரைப்படம் வெளியாக பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படத்தின் இயக்குனர்  மற்றும் கதாநாயகன் சேரன். அந்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் சரண்யா பொன்வண்ணன் தந்தை மற்றும் தாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சேரன் படங்கள் பெரும்பாலும் குடும்பத்தை மையப்படுத்தியே எடுக்கப்படும். குடும்பம், காதல், நட்பு என்று எல்லாவற்றிற்கும் திரையில் முக்கியத்துவம் கொடுப்பவர் இயக்குனர் சேரன். இவருடைய படங்கள் பார்த்துவிட்டு கண்ணீர் விடாதவர்கள் யாரு இருக்க முடியாது. அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக கதையை படமாக்கக்கூடியவர்.

அந்த வரிசையில் அமைந்தது தான் “தவமாய் தவமிருந்து”. இந்த படம் வெளியாகி ஆண்டுகள் பல கடந்தாலும் தான் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை நிருபர்களுக்கு பகிர்ந்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

படப்பிடிப்பில் இயக்குனர் சேரன் மிகக் கடுமையாக நடந்து கொண்டதாகவும் இது போன்றதொரு படத்தில் இனியும் நடிக்கக் கூடாது என்ற எண்ணம் அப்போது தோன்றியதாக சரண்யா தெரிவித்திருந்தார்.

சரண்யா பொன்வண்ணன் “அம்மா”கதாப்பாத்திரத்தில் மட்டும் அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டார். தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தாய்மார்கள் மனதை கொள்ளை கொண்டவர் என்றுகூட கூறலாம்.

அம்மா கதாப்பாத்திரமா உடனடியாக சரண்யாவை புக் செய்துவிடலாம் என்று பேசக்கூடிய அளவிற்கு நடிக்கக் கூடியவர்.

அவரையே சேரன் படப்பிடிப்பில் படாதபாடு படுத்திவிட்டார். வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் என்பது போல சீரியசான இயக்குனர்களால் தான் நினைத்தபடி தனது படத்தை எடுத்துமுடிக்க முடியும் என்பது உண்மைதான். அப்படித்தான் சேரனு தன்னுடைய எதிர்பார்ப்பு நடிப்பில் வரும் வரை யாரையும் அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார் என்று சரண்யா கூறியிருந்தார்.

POPULAR POSTS

gv prakash ar rahman
sathyaraj ks ravikumar
tamil actress
saravanan
sivaji ganesan
ilayaraja bharathiraja
To Top