Connect with us

செய்தில எல்லாம் வந்தப்பிறகு என்னை நீக்கிட்டாங்க… ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த இசையமைப்பாளர் தேவா..!

Tamil Cinema News

செய்தில எல்லாம் வந்தப்பிறகு என்னை நீக்கிட்டாங்க… ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த இசையமைப்பாளர் தேவா..!

Social Media Bar

கோலிவுட் சினிமாவில் கானா இசை அமைப்பாளராக பலராலும் அறியப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. 1990களுக்கு பிறகு நிறைய புது இசை அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் இசையமைப்பாளர் தேவா.

பொதுவாக கிராமிய இசையை எந்த இசை அமைப்பாளரும் கையில் எடுக்காத சமயத்திலேயே அதை கையில் எடுத்து வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியவர் தேவா. ஆனால் நிறைய மெலோடி பாடல்களையும் தேவா கொடுத்திருக்கிறார் என்றாலும் கூட கானா பாடல்களுக்கு இவர் பிரபலமானவர்.

பாட்ஷா திரைப்படத்தில் தேவா இசையமைத்த பாடல்கள்தான் அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு வகையில் முக்கிய காரணமாக இருந்தன. இந்த விஷயத்தை ரஜினிகாந்தே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஒரு ரஜினிகாந்த் திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்து தேவா கூறியிருக்கிறார்.

தேவாவுக்கு வந்த வாய்ப்பு:

அதில் அவர் கூறும்பொழுது சந்திரமுகி திரைப்படத்தில் நான்தான் இசையமைப்பதாக இருந்தது. இதற்காக சிவாஜி கணேசனின் வீட்டுக்கு என்னை அழைத்திருந்தனர். அங்கு ரஜினிகாந்த் இயக்குனர் பி வாசு எல்லோரும் அமர்ந்திருந்தனர்.

அவர்களையெல்லாம் கூடி பேசிவிட்டு என்னிடம் வந்து நீங்கள்தான் இசையமைக்கப் வேண்டும் என்று கூறினார்கள். பிறகு செய்தித்தாள்களிலும் சந்திரமுகி திரைப்படத்தில் நான் இசையமைப்பாளராக இருக்கிறேன் என செய்திகள் எல்லாம் வந்தது.

பிறகு தாமதமாகதான் அந்த திரைப்படத்தில் வித்யாசாகரை இசையமைக்க வைத்து விட்டனர். அதற்கு காரணம் என்னவென்றால் சந்திரமுகியின் கன்னட வெர்ஷனில் இசையமைத்தது வித்யாசாகர்தான் அதனால் தமிழிலும் அவரே இசையமைக்கட்டும் என்று கூறிவிட்டனர். அவரும் நன்றாகவே இசையமைத்திருந்தார் என்று அந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top